Saturday, August 26, 2023

வயல்

வயல்வெளியில்
கைகோர்த்து
நீ சொன்ன சொல்லும்

தினம் தினம்
வழி நடக்கையில்
மௌனமாய் கொல்லும் 

தழுவிப்போகும் 
தென்றலும் 
நெஞ்சின் 
சூடேந்தி செல்லும் 

ஓங்கி நிற்கும்
ஒற்றைப்பனை 
நெஞ்சுருக 
சாட்சி சொல்லும் 

No comments:

Post a Comment