வாழையிலை குடை பிடித்து
தளிர் நடை நீ போடையிலே !
சாரல் மழையின் கானத்துக்கு
கொலுசு தாளம் போடையிலே !
நடுங்க வைக்கும் இடியோசைக்கு
கருவிழி கரகம் ஆடையிலே !
மயக்கும் உன் புன்னகைக்கு
மின்னலும் கண் மூடையிலே !
சாரல் மழையும் காதல் கொண்டு
உன் எழில் காண ஏங்கிடுமோ !
வெட்கம் விட்டு சிறு மழையும்
புயல் மழையாய் ஓங்கிடுமோ !
No comments:
Post a Comment