Wednesday, October 4, 2023

காத்தோட பறக்குதடி

 வெட்ட வெளி காட்டுல 

பொட்ட வெயில் பாராம 

நட்டு வச்ச நாத்தெல்லாம் 

கொட்டும் ;மழையில் அவியுதடி !


வியர்வை நீரை சிந்தி சிந்தி 

பயிரை வைத்து காத்திருந்தா 

தண்ணீரை கொட்டும் வானம் 

கண்ணீரையும் கேட்குதடி !


கொத்து கொத்தா வெளஞ்சதெல்லாம் 

சேத்துல சாஞ்சு கெடக்கயிலே

சேத்து வச்ச கனவெல்லாம் 

காத்தோட பறக்குதடி !!


No comments:

Post a Comment