வெட்ட வெளி காட்டுல
பொட்ட வெயில் பாராம
நட்டு வச்ச நாத்தெல்லாம்
கொட்டும் ;மழையில் அவியுதடி !
வியர்வை நீரை சிந்தி சிந்தி
பயிரை வைத்து காத்திருந்தா
தண்ணீரை கொட்டும் வானம்
கண்ணீரையும் கேட்குதடி !
கொத்து கொத்தா வெளஞ்சதெல்லாம்
சேத்துல சாஞ்சு கெடக்கயிலே
சேத்து வச்ச கனவெல்லாம்
காத்தோட பறக்குதடி !!
No comments:
Post a Comment