பிறக்கும்போது
ஒருத்தியின்
பனிக்குடத்தை
உடைத்து
பிறந்த
பலனோ என்னவோ ...
எனது
மனக்குடத்தை
உடைத்து
போகிறாள்
இன்னொருத்தி !!
======================================
எங்கிருந்து
காப்பியடித்தாய்
இக்கவிதைகளை
என்று கேட்டாள் ...
அவ்வப்போது
வீசும்
உனது
கவிதை
விழிகளில்
இருந்துதான் !!
======================================
கிழவன்தான் ...
வாலிப
கவிஞனாகி விடுகிறேன்
உன்னை
காணும் போதெல்லாம் !
======================================
No comments:
Post a Comment