எனது
கருப்பு வெள்ளை
கனவுகளுக்கு
வண்ணம்
சேர்த்தவள்
நீ !!
கனவு
காண்பதே
வாடிக்கை
ஆகி விட்டது
எப்போதும் !!
========================
ஒவ்வொரு
கனவிலும்
தேடிக்கொண்டே
இருக்கிறேன் ...
விரும்பி
தொலைத்த
நினைவுகளை !!
=========================
உனது
காதல்
பட்ஜெட்
எனது
இதய
மாநிலத்துக்காக
அல்லவோ !!
=========================
கவிதை
வரிகளை
உனது
புன்னகையில்
ஒளித்து
வைத்துக்கொண்டு
என்னை
கவிதை
எழுத
சொன்னால் ..
என்னதான்
எழுதுவது !!
=========================
நீதான்
என்னுலகம்
என்று
சொல்ல
யாருமில்லை ...
ஒருவேளை
இன்னமும்
கிராமமாகவே
இருக்கிறேனோ !!
=========================
சற்று
தள்ளியே
இரு ...
மூழ்கடிக்கும்
என் அன்பில்
மூச்சடைக்க
போகிறது
உனக்கு !
=========================
No comments:
Post a Comment