Monday, July 8, 2024

விழி ஊசி

உன்னை 

வர்ணித்து 

ஏதேதோ

கிறுக்கிக் கொண்டிருந்தேன்...


ஜன்னல் வழியே

எட்டிப் பார்த்து

வீணாய்

கர்வப்பட்டுக்கொண்டிருக்கிறது

நிலா!!!

======================

 நிலவிடம்தானே 

கொடுத்து 

அனுப்பினேன் 

எனது 

காதல் 

கவிதைகளை ...


பொறாமை 

கொண்டு 

தரவில்லையோ 

உன்னிடம் !!


============


கிழிந்துதான் 

கிடக்கிறது 

இதயம் ...


காதல் 

கோர்த்த 

உன் 

விழி ஊசி 

வேண்டி !!


=============

போதைக்கு 

எதிரி 

நான் ...


கள்ளச்சாராயமாய் 

உன் 

நினைவுகள் !!


=================

மனதோடு 

உன் 

நினைவுகள் 

மல்லுக்கட்டும்

போதெல்லாம் 


மல்லுக்கட்டி 

பார்க்கிறேன் 

கவிதை 

புத்தகத்தில் !!

==================

உன்னை 

சந்தித்தது 

முதல் 

மரணம் 

வரை 

காதல் தசையாமே ...


பரிகாரம் 

சொல்வாயா !!


================

என்னுயிரை 

பறிக்கும் 

அளவிற்கு 

எமனுக்கு 

சக்தி 

இல்லை போலும் ...


அதனால்தான் 

அனுப்பியிருக்கிறான் 

உனது 

காதலை !!


==================

24 மணி நேரத்தில் 

நினைவுகளை 

அழிக்கும்  

இதயத்தை படைக்கும் 

வித்தையை 

இறைவன் 

அறியான் போலும் ...


இந்த 

ஸ்டேட்டஸ் 

போல !!


=====================

No comments:

Post a Comment