உன்னை
வர்ணித்து
ஏதேதோ
கிறுக்கிக் கொண்டிருந்தேன்...
ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்து
வீணாய்
கர்வப்பட்டுக்கொண்டிருக்கிறது
நிலா!!!
======================
நிலவிடம்தானே
கொடுத்து
அனுப்பினேன்
எனது
காதல்
கவிதைகளை ...
பொறாமை
கொண்டு
தரவில்லையோ
உன்னிடம் !!
============
கிழிந்துதான்
கிடக்கிறது
இதயம் ...
காதல்
கோர்த்த
உன்
விழி ஊசி
வேண்டி !!
=============
போதைக்கு
எதிரி
நான் ...
கள்ளச்சாராயமாய்
உன்
நினைவுகள் !!
=================
மனதோடு
உன்
நினைவுகள்
மல்லுக்கட்டும்
போதெல்லாம்
மல்லுக்கட்டி
பார்க்கிறேன்
கவிதை
புத்தகத்தில் !!
==================
உன்னை
சந்தித்தது
முதல்
மரணம்
வரை
காதல் தசையாமே ...
பரிகாரம்
சொல்வாயா !!
================
என்னுயிரை
பறிக்கும்
அளவிற்கு
எமனுக்கு
சக்தி
இல்லை போலும் ...
அதனால்தான்
அனுப்பியிருக்கிறான்
உனது
காதலை !!
==================
24 மணி நேரத்தில்
நினைவுகளை
அழிக்கும்
இதயத்தை படைக்கும்
வித்தையை
இறைவன்
அறியான் போலும் ...
இந்த
ஸ்டேட்டஸ்
போல !!
=====================
No comments:
Post a Comment