Monday, October 14, 2024

எதை எழுதுவது

 எதையாவது 

எழுத வேண்டுமென்று 

சிந்தித்தாலே 

சிந்தனைக்குள் 

நீ 

வந்து விடுகிறாய் ...


எதை 

எழுதுவது !!!


==================

ஆயுள் 

குறைகிறதே 

என்ற 

வருத்தமெல்லாம் 

இல்லை ...


உன்னோடு 

இருக்கப்போகும் 

நாட்கள் 

குறைகின்றதே 

என்ற 

வருத்தம்தான் 

எனக்கு !!


=====================


உன் 

விழியைவிட 

கூர்மையான 

ஆயுதத்தை 

இன்னமும்  

கண்டுபிடிக்கவில்லை

உலகம் !!


=====================


Sunday, October 6, 2024

புண்ணியம்

எண்ணுவதெல்லாம்
நேரினில்
காணும்
புண்ணியம் இருந்தால்
மனம்
எங்கு போகும்..
==================================
நிறைவேறாத
என்
கனவை
பெருமூச்சாய்
வாங்கிக்கொண்டது ..
காற்று !!
==================================
துப்பாக்கி சூடு 
குண்டு வெடிப்பு 
பயங்கர கலவரம் ... 

பயமின்றி 
எல்லா இடத்திலும் 
நுழைந்து வந்தது ...

காற்று !!

=================================
அத்தனை 
மொழிகளையும் 
தன்னில் 
கடத்தி 
என்ன பயன்...

இரைச்சல் 
மொழியைத்தவிர 
வேறெதுவும் 
தெரியவில்லையே ...

காற்றுக்கு!!

============================



Saturday, October 5, 2024

இதழிலிருந்து

 கடற்கரையின் 
மாலைத்தென்றல் 
கவிதை ஊற்றாய் 
மாறாதா !!

கண்ணகி 
சிலையின் 
அருகில் 
நின்றால் 
காவியம் ஓன்று 
தோன்றாதா !!

பாரதி இல்லத்தில் 
காலடி வைத்தால் 
சந்த கவிதைகள் 
இதயத்தில் 
கொட்டாதா !!

சிறுகூடல்பட்டிக்குள் 
நுழைந்தால் 
மனதில் 
பாட்டுவரிகள் 
நுழையாதா !

உன்னைப்பற்றி 
இரண்டு 
வரிகளாவது 
எழுத வேண்டுமே ...
இதழிலிருந்து 
இரண்டு 
வரிகளையாவது கொடு !!