கடற்கரையின்
மாலைத்தென்றல்
கவிதை ஊற்றாய்
மாறாதா !!
மாலைத்தென்றல்
கவிதை ஊற்றாய்
மாறாதா !!
கண்ணகி
சிலையின்
அருகில்
நின்றால்
காவியம் ஓன்று
தோன்றாதா !!
பாரதி இல்லத்தில்
காலடி வைத்தால்
சந்த கவிதைகள்
இதயத்தில்
கொட்டாதா !!
சிறுகூடல்பட்டிக்குள்
நுழைந்தால்
மனதில்
பாட்டுவரிகள்
நுழையாதா !
உன்னைப்பற்றி
இரண்டு
வரிகளாவது
எழுத வேண்டுமே ...
இதழிலிருந்து
இரண்டு
வரிகளையாவது கொடு !!
No comments:
Post a Comment