Sunday, October 6, 2024

புண்ணியம்

எண்ணுவதெல்லாம்
நேரினில்
காணும்
புண்ணியம் இருந்தால்
மனம்
எங்கு போகும்..
==================================
நிறைவேறாத
என்
கனவை
பெருமூச்சாய்
வாங்கிக்கொண்டது ..
காற்று !!
==================================
துப்பாக்கி சூடு 
குண்டு வெடிப்பு 
பயங்கர கலவரம் ... 

பயமின்றி 
எல்லா இடத்திலும் 
நுழைந்து வந்தது ...

காற்று !!

=================================
அத்தனை 
மொழிகளையும் 
தன்னில் 
கடத்தி 
என்ன பயன்...

இரைச்சல் 
மொழியைத்தவிர 
வேறெதுவும் 
தெரியவில்லையே ...

காற்றுக்கு!!

============================



No comments:

Post a Comment