ஒரு
வீட்டை
எரிக்கும்போது
தீயதாக
தோன்றும்
நெருப்பு ...
உணவு
சமைக்கும்போது
நல்லதாகி
விடுகிறது !!
=======================
மரணத்தை
தடுக்க
முடியாது ...
பிறந்தது
மரணித்தே
தீரும் !!
மரணத்தை
தடுக்க
ஒரே
வழிதான்
இருக்கிறது ...
பிறவாமல்
இருத்தல் !!
================
இன்பத்தை
பெருக்குவதற்கு
எளிய
வழி
துன்பத்தை
குறைத்து
கொள்வதே !!
=======================
அனுபவிப்பதால்
ஆசைகள்
பூர்த்தி
அடைவதில்லை ...
நெய் ஊற்றுவதால்
நெருப்பு
அணைவதில்லை !!
=======================
உடல்
போக முடியாத
எல்லைக்கு
உடலின்
உள்ளிருக்கும்
ஏதோ
போக
முயல்கிறது !!
அது
எதுவென்றுதான்
புரியவில்லை !!
=======================
கங்கை
நீர்
முழுவதும்
கடலை அடைந்தபின்
கங்கையை
எளிதாக
கடந்துவிடலாம்
என்று
காத்திருக்கிறேன் ...
யுகங்களாய்
காத்திருக்க
நேருமோ !!
=======================
சில நேரங்களில்
தூங்க வைக்கிறது ...
சில நேரங்களில்
தூக்கத்தை கெடுக்கிறது ...
எப்படி வகைப்படுத்துவது
உன் நினைவுகளை !!?
=======================
=======================
No comments:
Post a Comment