Wednesday, October 31, 2012

குயிலோசை

எனக்கு தெரியும் 
என்னை மட்டுமல்ல  
என் கவிதைகளையும் 
நீ விரும்ப மாட்டாய் என்று ...!
ஆனால் ......
உனக்கு தெரியுமா ...  !!!?
நான் மட்டுமல்ல 
என் கவிதைகளும் 
உன்னை விரும்புகின்றன !!!!
==============================
என் கவிதைகளை நினைக்கும்போது 
எனக்கே பொறாமையாக இருக்கிறது 
....
என்னை காணும்போது 
புன்னகை கூட 
சிந்தாத உன் உதடுகள் 
என் கவிதைகளை படிக்கும்போது
கேலி புன்னகையாவது 
சிந்துகிறதே 
============================
எப்படி நான் 
ஒப்பு கொள்ள முடியும் ... !!?

கம்பனும் காளிதாசனும் 
கவிஞர்கள் என்று ....!!!

உன்னை பாடவில்லையே அவர்கள் ... !!!

கால தேவனுக்கு 
அவர்கள் மேல் என்ன கோபம் ... !!?

உன்னை தாமதித்து படைத்து விட்டானே !!!!

===================================
மொட்டை மாடி ....
நிலவில் உன்னை கண்டேன் ....
கிறுக்கினேன் சில வரிகள் ....!!!

மின்னல் அடித்து 
படித்து பார்த்தது வானம் ...

மேகங்களை அனுப்பி 
கண்ணீர் சிந்தியது ...

கூடவே 
இடியாய் 
நகைக்கவும் செய்தது  ...

ஹ்ம் .... வானமும் உன்னைபோலத்தான் 
==============================
அவள் சொன்னாள் ...

உன் கவிதைகள் 
புல்லரிக்க செய்கிறது ....

ஒரு வேளை ...
அவை ...
செல்லரித்த என் 
மனதில் இருந்து
பிறந்ததாலோ ....!!!?
=============================
பேனா மையோடு 
உன் நினைவுகளையும் 
ஊற்றி எழுதினேன் ..
.....
உன் பெயரை தவிர 
எதையும் எழுத 
மறுக்கிறது ....!
============================

Saturday, October 27, 2012

உன்னை சுவாசிப்பதால்



தினம்
காலையில் விழிக்கிறேன் ...
குளிக்கிறேன் ....
நடக்கிறேன் ....
பேசுகிறேன் ...
சாப்பிடுகிறேன் ...

.....

எப்படி என்னால் முடிகிறது ....
....
புரிகிறது ....

உன்னை சுவாசிப்பதால் தான் 

படைப்பு



ரொம்ப நாள் 
யோசித்திருக்கிறேன்
நிலவு .....
ரோஜா ....
தென்றல் ...
மழை மேகம் ...
நதி ....
.....
கடவுள் 
ஏன் இவையெல்லாம் படைத்தான்
....
உன்னை கண்ட பின்புதான் 
புரிந்தது 
....
உன்னை படைப்பதற்கு முன்
கடவுள் 
எடுத்து கொண்ட 'ட்ரைனிங்' அது 

கண்ணாடி


அஞ்சு ரூபாயில் இருந்து
ஐயாயிரம் ரூபா வரை
கண்ணாடி வாங்கி
பார்த்து விட்டேன் 
எந்த 
கண்ணாடியும்
உன் மனதை போல
என்னை
அழகாக காட்டவில்லை

மின்சாரம்


கண்ணே ... 
தமிழ்நாடு 
மின்சாரம் இல்லாமல் 
தவிக்கிறதாம் 
உன் கண்களில் இருந்து 
கொஞ்சம் கொடுத்து 
உதவேன் 

உனக்காகவே

உன்னை காண வெட்கி தானோ 
நிலவு
மாதத்தில் ஒரு நாள் மட்டும் வந்து போகிறது ?
நீ சூடாததால் தானோ
ஏன் வீட்டு ரோஜாவும்
வாடிப்போனது  ?
உனக்கு  வியர்பதால் தானோ
காற்று தென்றலாகி வீசுகிறது ?
உன்னை தொடும் ஆசையில் தானோ
வானம் தன் மழை கரங்களை 
அடிக்கடி நீட்டி பார்கிறது ?