Sunday, December 1, 2019

கீழ்வானம் சிவந்தது


கீழ்வானம் சிவந்தது !
தூக்கம் கலைத்தன கதிரவன் கதிர்கள் !

கொஞ்சி பேசும் கிளியே!
வஞ்சியவள் துஞ்சி எழுந்தாளா என்று
கொஞ்சம் கண்டு வருவாயா?

வயல் நாற்றுகளை தாலாட்டும் தென்றலே !
கயல் விழியாள் கண் விழித்தாளா என்று கேட்டு வருவாயா?

துடிக்கும் கன்னத்தில் அவள் அனபின் எச்சமிருக்கிறது !

கொதிக்கும் நெஞ்சினில் அவள் மார்பின் சூடு இன்னும் மிச்சமிருக்கிறது !

சிணுங்கும் அவள் வளையோசை
செவிகளில் இன்னமும் கேட்கிறது!

மயக்கும் அவள் குரலோசை
மனதை இன்னமும் மயக்குகிறது!

பிரியும் நேரத்தில்
அவள் கண்களில் கண்ட கலக்கம்
இன்றும் கலங்க வைக்கிறது

கொன்றையும் பூத்தது
வசந்தமும் வந்தது

காலதேவனே!
இரு மனம் கலந்தவர்களை
வேறாக்கிய பாவம் உனக்கெதற்கு!

அவளை என்னிடத்தில் சேர்த்து விடு
இன்றேல்
என்னை அவளிடத்தில் கொண்டு போய்விடு

No comments:

Post a Comment