மனிதர்களிடமிருந்து வெளிப்படுபவை வார்த்தைகள்
மகான்களிடமிருந்து வெளிப்படுபவை உண்மைகள்
இரும்பு சங்கிலியால் பிணைக்கப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
தங்கம் விலை மதிப்பற்றது ... எனில் ... தங்க சங்கிலியால்
பிணைக்க படுவதை நீங்கள் விரும்புவீர்களா ?
அதுபோல, தீய எண்ணங்களால் மட்டுமல்ல
நல்ல எண்ணங்களாலும் உங்கள் மனது பிணைக்க பட
இடம் கொடுக்காதீர்கள்.
தீயவற்றிடமிருந்து மட்டுமல்ல நல்லவற்றிடமிருந்தும்
உங்கள் மனது விலகி இருக்கட்டும்.
உங்களுடைய எண்ணங்கள் மட்டுமே
உண்மையான உங்களை
உங்களுக்கு காட்டும்.
உங்களால் கட்டு படுத்த முடியாத
உங்கள் மனதினுள் இறைவன் எப்படி நுழைய முடியும் ?
உங்கள் எண்ணங்களுக்கு உருவமில்லை.
ஆனால் எண்ணங்களின் விளைவுகளான செயல்களுக்கு உருவமுண்டு.
செயல்களில் கவனமாக இருங்கள்.
எண்ணம் உருவாகும்போதே நீங்கள்
அதனை கண்காணிக்க தொடங்கி விட்டால்
எண்ணம் உங்களுக்கு அடிமை ..
விட்டுவிட்டால் எண்ணத்திற்கு நீங்கள் அடிமை.
செயல்களின் மூலம் எண்ணமே!.
எண்ணம் தெளிந்ததெனில் செயலும் தெளிவாகும்.
தெளிந்த செயலின் விளைவை பற்றி
நீங்கள் கவலை கொள்ள
தேவையில்லை.
.நீங்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளே
நீங்கள் யார் என்பதை
உலகிற்கு வெளிப்படுத்துகின்றன
மனிதனுடைய சக்தியை வீணடிப்பவை இரண்டு.
முதலாவது நாக்கு .
இரண்டாவது கண்கள்.
No comments:
Post a Comment