வர மாட்டாய் என்று
தெரிந்தும் அழைப்பேன் ...
தர மாட்டாய் என்று
தெரிந்தும் கேட்பேன் ...
கேட்க மாட்டாய் என்று
தெரிந்தும் சொல்வேன் ...
நீ எப்படியோ ...
நான் இப்படித்தான் !!
இதுதான்
கடைசி ஜென்மம் என்று
நினைத்தேன் ...
உன் கனவுகளோடு வாழவே
ஜென்மங்கள்
போதாது போலிருக்கிறதே !
உன்
கண்ணாடி வளையலும்
கால் கொலுசும்
ஓர விழி பார்வையும்
குறு நகையும்
காப்பி ரைட்
கேட்கும் போலிருக்கிறதே
என் கவிதை
கிறுக்கல்களுக்கும் !!
No comments:
Post a Comment