Saturday, November 20, 2021

நெஞ்சணைய நீ இருந்தால்

 வான் தொடும் மலைகள்

மலை தழுவும் முகில்கள்

கவிதை மழை பொழியும் 

களிப்பினை மெல்ல தூவும் !


நடை பழகும் நதிமகள்

இடை நெளியும் புதுமகள் 

பறக்கும் பறவை கூட்டம் 

கற்பனைக்கு சிறகு தரும் !


குடை பிடிக்கும் ஒருமரம்

பாய் விரிக்கும் புல்வெளி

நெஞ்சணைய நீ இருந்தால் 

பஞ்சணை தோற்றுப் போகும் !

No comments:

Post a Comment