வான் தொடும் மலைகள்
மலை தழுவும் முகில்கள்
கவிதை மழை பொழியும்
களிப்பினை மெல்ல தூவும் !
நடை பழகும் நதிமகள்
இடை நெளியும் புதுமகள்
பறக்கும் பறவை கூட்டம்
கற்பனைக்கு சிறகு தரும் !
குடை பிடிக்கும் ஒருமரம்
பாய் விரிக்கும் புல்வெளி
நெஞ்சணைய நீ இருந்தால்
பஞ்சணை தோற்றுப் போகும் !
No comments:
Post a Comment