Friday, June 9, 2023

வாசம் கெட்டு

 பூவென்று 

அழைத்து

மோசம் 

செய்து  

போய்விட்டாய் ....

உன் 

நேசம் இன்றி 

வாசம் கெட்டு  

தவிக்கிறது 

இந்த பூ !!!


புரையோடிய 

கண்களாலும் 

திரை போட்டு 

மறைக்க 

முடியவில்லை ...

உனது 

பிம்பத்தை !!


இன்னமும் 

சந்தேகம் 

தீரவில்லை ...

ஏறிக்கொண்டிருப்பது 

பிளட் பிரஷரா ...

காதல் பிரஷரா ...


ஆயிரம் 

வழிகள்  ...

இருந்தும் ...

உனது 

இதயத்தின் 

நிழலில் 

மட்டுமே 

இதம் 

காண்கிறது 

எனது 

காதல் !!


நீ 

காதலை 

சொல்லிய 

அப்பொழுதே  

உலகமே 

உறைந்திருக்காதா 

என் 

ஏங்கி போகிறேன் 

இப்பொழுது  !!


நீ 

சென்று கொண்டே 

இருக்கிறாய் ...

உனது 

நினைவுகள் 

வந்து கொண்டே 

இருக்கிறது  ...

இது 

மன்மதனின் 

ரிலேட்டிவிட்டி 

தியரியோ !!


யோசித்து 

எழுதவில்லை ...

நேசித்து 

எழுதுகிறேன் ...

உன்னையே 

சுவாசித்து 

கொண்டிருப்பதால் !!


நமது  

நேற்றைய 

கனவுகள் 

எனது

இன்றைய 

தேவைகள் 

ஆனபோது ...

உனக்கு 

மட்டும் 

எப்படி 

அவை  

நினைவுகள் 

ஆயின !!!



யார் சொன்னது 

உன்னை 

மறக்க 

முடியாதென ...

நிச்சயம் 

ஒரு நாள் 

உன்னை 

மறந்திருப்பேன் ...

அந்நாளில் 

இவ்வுலகை 

பிரிந்திருப்பேன் !!!


கடமையை 

செய் ...

பலனை 

எதிர்பாராதே 

என 

கண்ணன் 

கீதையில் 

சொன்னது 

எனது 

காதலுக்காகத்தானோ !!


ஒரு வழிப்பாதை 

என்று 

அறியாமல் 

நுழைந்து விட்டேன் 

காதல் வழி 

பாதையில் ...

உனக்கு தெரிந்த 

திரும்பும் வழியை 

சொல்லி விட்டாவது 

போ !!!


கனவு 

கோர்க்குது 

கண்களில் ...

நினைவு 

கோர்க்குது 

நெஞ்சத்தில் ...

ஒரு முறை 

கோர்த்துவிடு 

உனது 

காதலை !!


உனது 

பார்வை 

மழையில் 

நனைந்து 

பிடித்து கொண்டது 

காதல் தோஷம் ...

வந்து விடு 

நேச மருந்தோடு !!


நேரில் பார்க்கையில் 

காதலில் 

கஞ்சத்தனம் 

காட்டினாலும் ...

எனது 

கனவுகளில் 

காதல் வள்ளலாகவே 

இருக்கிறாய் !!


மன்மதனின் 

ஐந்து 

அம்புகளும் 

தோற்று 

போகின்றன 

உனது 

ஒரே ஒரு 

விழி அம்பில் !!


என்னை 

சுற்றி 

மின்மினி பூச்சிகளாய் 

பறக்கும் 

உனது 

எண்ணங்களின் 

வெளிச்சத்திலேயே 

குளிர் காய்ந்து 

விடுகிறது 

எனது 

காதல் !!


உன்னை 

காணும் நேரம் 

அமிர்த 

யோகமாகவும் 

உன்னை 

காணாத நேரம் 

எம கண்டமாயும் 

தெரிகிறது 

எனது 

தின பலன்களில் !!


நீரின்றி 

அமையாது 

உலகு ...

இது 

வள்ளுவன் வாக்கு ...


நீயின்றி 

அமையாது 

என் உலகு ...

இது 

என் வாக்கு !!


உனது 

நினைவுகளை  

போர்த்திக்கொண்டு 

குளிர் 

காய்ந்து விடுகிறது 

எனது மனம் ...

உனது நினைவுகள் 

சூடாகவே 

இருப்பதால் !




No comments:

Post a Comment