Sunday, July 26, 2026

வேறே வசந்தமும் ஏனோ?

ஆண் :
வசந்த காலத்திற்கு 
வீசிடும் தென்றலும் 
வாசனை பூக்களும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
கனலும் கற்பூரமும்
திரியும் தீபமும் ஏனோ?
உனதன்பு தீபம்
என்றும் இருந்தால் 
வேறே பூஜையும் ஏனோ?

சரணம் 1
ஆண் :
தென்றலும் உன்னை 
தீண்டிய பின்பு 
பொறாமை தீயில் 
உருகுது  !
பூந்தோட்டமும் உன்னை 
கண்டதனாலே 
பூக்களின் வாசனை 
மறக்குது !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
வானில் மதியும் 
குயில்களின் கீதமும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
மலர் சரங்களும் 
அர்ச்சனை பூக்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே மலர்களும் ஏனோ?

சரணம் 2
ஆண் :
காவிரிக்கரையில் 
உன் நடை கண்டு 
அன்னமும் கொஞ்சம் 
நாணுது !
மயில்களும் உன்னை 
கண்டு மயங்க 
கூந்தலும் மேகமாய்  
தோணுது !  

ஆண் :
வசந்த காலத்திற்கு 
மலையின் அருவியும் 
மயிலின் நடனமும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
பஜனை சங்கீதமும் 
மந்திர ஒலிகளும் ஏனோ?
உன் அன்பு மொழிகள் 
என்றும் இருந்தால் 
வேறே மந்திரம்  ஏனோ?

சரணம் 3
ஆண் :
வைகறை சூரியன் 
உன்னெழில் கண்டு 
பொன்னொளி வீசி 
ஆடுதே !
மாலை கதிரவன் 
மறைவதனாலே  
பிரிய மனமின்றி 
வாடுதே !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
அலையும் கடலும் 
மாலையில் சுடரும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே ஒளியும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
நெற்றியில் நீறும் 
குளிர் சந்தனமும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே திலகமும் ஏனோ?

ஆண் :
நான்கு வேதங்களும் 
பதினெண் புராணமும் 
வானில் 
சொர்க்கம்  தேடுமே !

பெண் :
கைகள் கோர்த்து
உன்னுடன் நடந்தால்
பூமியே 
சொர்க்கம் ஆகுமே !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
தேனீயும் தும்பியும் 
பட்டாம் பூச்சியும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே இனிமையும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
அறுசுவை கனிகளும் 
அபிஷேகங்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே கோவிலும் ஏனோ?

இருவரும் :
மலரும் மணமும் போல் 
ஒன்றாய் இருந்தால் 
உலகே 
வசந்தம் ஆகுமே  !
இதயத்தில் காதல் 
என்றும் இருந்தால் 
இல்லமே ஆலயம் ஆகுமே !

================

செந்நிற இதழ்கள் 
தேனின் இனிமை போல் 
சிந்தையில் தினமும் ஊறவே !
விழிகளின் மொழிகள் 
இதயக்கவிதை என 
உயிரின் இசையாய் மாறவே !

மான் விழி மங்கை 
என் அருகில் இருந்தால் 
வேறே சொர்க்கமும் ஏனோ ?

Friday, July 24, 2026

பருவக்காற்று வீசுது

பருவக்காற்று 
வீசுது 
பல கதைகள் 
பேசுது.

Wednesday, July 22, 2026

ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ

தோட்டம் ஓன்று 
நேரில் வந்து 
ஆடச்சொன்னதோ ?
தோகை கொண்ட 
காதல் சிந்து 
பாடச் சொன்னதோ ?

Tuesday, July 21, 2026

மூங்கிலிலே வரும்

மூங்கிலிலே 
வரும் 
மோஹன ராகம் 
பூங்குயிலை 
வெல்லுமா ?
தேன் கவிதை 
சொல்லுமா ?

விலாசம் மட்டும் இருக்கிறது

நான்
தூங்குவதற்காக
தாலாட்டு
பாடினாய்...
உனது 
இறுதி
உறக்கத்திற்கு
ஒப்பாரியும்
பாட முடியாமல்
தவித்து நிற்கிறது
மனது !!

Sunday, July 19, 2026

இதயத்தின் சொத்து தகராறு

உன்
காதலை
என்
நெஞ்சில்
குடிவைத்து
விட்டாய்...
என்
நினைவுகள்
எல்லாம்
வாடகையாகிப்
போனதோ!

நீயாவது அறிவாயா பதிலை?

கண் 
வழியே ...

என் மனது ..

கவிதை 
போல் 
ஓடியதோ !

Wednesday, July 15, 2026

பார்வை இலக்கியம்

நான் 
காகிதத்தில் 
வடிப்பதெல்லாம் 
உனது 
பார்வை 
எனது 
இதயத்தில் 
எழுதும் 
கவிதைகளைத்தான் !

Tuesday, July 14, 2026

மூக்குத்தி

உன்
மூக்குத்தி
மின்னும்
ஒவ்வொரு முறையும்...
என்
இதயம்
மின்தடையின்றி
தடுமாறுகிறது!

Saturday, July 11, 2026

வண்ணத்து பூச்சிகளிடம் மோதாதே

வண்ணத்து பூச்சிகளை 
ஏன் 
படைத்தான்  
என்கிறாய் ?

நிறங்களை 
எப்படி 
அழகாக்குவது ?
====================
நிறங்களை 
உருவாக்கும் 
போட்டியா ?

வண்ணத்து பூச்சிகளிடம் 
மோதாதே ...

தோற்றுவிடுவாய் !
====================
நிறங்கள் 
என்ற தலைப்பில் 
கவிதை  எழுத 
பூங்காவில் அமர்ந்து 
சிந்தித்தேன் ...

ஆரம்பித்து 
வைத்தது 
இயற்கை  ..

எதிரே 
பூச்செடியில் 
வண்ணத்துப்பூச்சி !
====================
பூக்கள் 
உன் 
கூந்தலுக்காக 
மட்டுமே 
பூக்கின்றன 
என்று எண்ணியிருந்தேன் ..

வண்ணத்து பூச்சிகளை 
பார்க்கும்  
வரை !
====================
சோர்ந்து
போனாள்...

வண்ணத்துப்பூச்சியை
துரத்திய
சிறுமி!

சோர்வதே
இல்லை...

உன்னை
துரத்தும்
என்
நினைவுகள்!
====================
வண்ணத்து 
பூச்சிகளை 
படைத்து 
தன்னை 
அழகாக்கிக் கொண்டது 
இயற்கை !

இயற்கை 
பிறழ்வதே 
இல்லை !


தும்பிப்பெண்ணே !

தும்பிக்கு
பூக்கள் மீது
மோகம்...

எனக்கோ
தும்பியே
மோகம்!
══════════════
உன்
மெல்லிய
பார்வையோடு
போட்டி
போடுகிறதே...

தும்பியின்
மெல்லிய
சிறகுகள்!
══════════════
குளத்தோரம்
வட்டமிட்டு
திரும்பிவிட்டது
தும்பி...

என்
நினைவுகளின்
ஓரத்தில்
இன்னும்
நீ!
══════════════
அதிராமல்
மலர்மீது
அமர்ந்துவிட்டதே
தும்பி...

உன்
பார்வை
அமர்ந்ததற்கே
பிரளயமாய்
அதிர்கிறது
இதயம்!
══════════════
தோட்டத்திற்கு
பூக்கள்
அழகா?

பூக்களில்
அமரும்
தும்பிகளால்
அழகா?

அல்லது...

நீ
உலவுவதால்
தோட்டமே
அழகா?
══════════════
பூக்களை
ஏன்
ஏமாற்றுகிறாய்?

தங்களைப்
பார்க்கத்தான்
தும்பிகள்
வருகின்றன
என்று...
பூக்கள்
இன்னும்
நம்பிக்கொண்டிருக்கின்றன!

இயற்கை பிறழ்ந்த கணம்

புயல் 
கடந்தபின் 
சேதம் என 
சொல்வதுண்டு  ...

இதென்ன 
தென்றல் 
கடந்தபின் 
சேதம் ?

Thursday, July 9, 2026

நெஞ்சுல வெதச்சது !

மல்லிப்பூ
செடியில் 
பூத்தா 
வாசனதான் 
துளைக்கும் ...

நீ 
கூந்தலிலே 
வச்ச பூ ...

மனசயெல்லாம் 
பொளக்கும் !.

Sunday, July 5, 2026

தள்ளாடும் இயற்கை

வியர்க்கிறதென  
மரத்தடியில் 
ஒதுங்கி விட்டாய் ...

வியர்க்கிறது பார் ..

பாவம்
மரத்திற்கு !!

கோலக் கவிதைகள்

வாசல் முழுவதும்
நீ
வரைந்த கோலம்...

என்
வாழ்க்கை முழுவதும்
நீ
வரைந்த காதல்!

கால்பந்து

புல்வெளி முழுவதும்
ஓடுவது 
ஒரு பந்துதான் ...

ஆயிரம் இதயங்கள்
அதன் பின்னால்!
==================
கோல் கம்பிகளுக்கு
நடுவேதான்
இடைவெளி...

வெற்றிக்கும்
தோல்விக்கும்
இடையில் இல்லை!
==================
விசில்
ஒலிக்கிறது...

ஆட்டம் மட்டுமல்ல,
இதயங்களும்
தொடங்குகின்றன!
==================
பந்து
உருண்டு செல்கிறது...

கனவுகளோ
சிறகடித்துச் செல்கின்றன!
==================
கால்கள்
எழுதும் கவிதைக்கு...

கோல்கள்தான்
நிறுத்தற்குறிகள்!
==================
வியர்வைத் துளிகளை 
நிரப்பத்தான் 
வெற்றிக் கோப்பையோ !
==================
மைதானம்
பச்சை நிறத்தில்...

ஆனால்
எரிவதென்னவோ
வீரத்தின் செந்நிறம்!
==================
நேரம்
தீர்ந்து போகலாம்...

நம்பிக்கை
தீர்ந்து போகக் கூடாது!
==================
பந்தின்
ஒவ்வோர் சுழற்சியிலும்...

விதியும்
சுழன்று கொண்டே
இருக்கிறது!
==================
கோப்பையை
உயர்த்தும் கைகள்...

அதன் அடியில்
தெரியாமல் மறைந்திருக்கும்
ஆயிரம் முறை
விழுந்த கால்கள்!
==================
கால்பந்து
வட்டமாக இருப்பதால்...

யாருடைய
வெற்றியும்
நிரந்தரமல்ல!

ஊர் சொல்லும் காதல்

மதுரை மல்லிகைப்பூ போல
மணக்கும் உன் மூச்சாலே
நித்தம் மயங்கித் திரியுறேனே...
நெஞ்சம்
வாசமாகி தவிக்கிறேனே!
====
காஞ்சிபுரம் பட்டுப் போல
மென்மையுள்ள உன் தீண்டலாலே
காற்றுக்கே பொறாமையாச்சே...
நெஞ்சம்
நூலாகி தவிக்கிறேனே!
====
மணப்பாறை முறுக்கு போல
சுற்றிவரும் உன் சிரிப்பாலே
நேர்வழி மறந்தேனே...
நெஞ்சம்
சுற்றிவந்து தவிக்கிறேனே!
====
திண்டுக்கல் பூட்டு போல
பூட்டிவிட்ட உன் பார்வையாலே
விடுபட வழியில்லையே...
நெஞ்சம்
சிறையாகி தவிக்கிறேனே!
====
பழனி பஞ்சாமிர்தம் போல
இனிக்கும் உன் முத்தத்தாலே
பசிதீர மறுக்கிறேனே...
நெஞ்சம்
பக்தியாகி தவிக்கிறேனே!
====
ஊட்டி பனிமூட்டம் போல
சூழ்ந்த உன் நினைவாலே
வழியெல்லாம் மறந்தேனே...
நெஞ்சம்
மூடுபனியாய் தவிக்கிறேனே!
====
குற்றாலம் அருவி போல
கொட்டும் உன் சிரிப்பாலே
நனைந்தே போனேனே...
நெஞ்சம்
வெள்ளமாகி தவிக்கிறேனே!
====
பாபநாசம் தண்ணீரைப் போல
தெளிந்த உன் மனசாலே
பாவமெல்லாம் மறந்தேனே...
நெஞ்சம்
புனிதமாய் தவிக்கிறேனே!
====
செட்டிநாடு காரம் போல
சுட்டெரிக்கும் உன் கோபத்தாலே
சொல்லெல்லாம் கருகுதடி...
நெஞ்சம்
தணலாகி தவிக்கிறேனே!
====
கும்பகோணம் டிகிரி காப்பி போல
மயக்கும் உன் பார்வையாலே
தூக்கமெல்லாம் தொலைஞ்சிடுச்சே...
நெஞ்சம்
விழித்தே தவிக்கிறேனே!
====
சிவகாசி தீப்பொறி போல
சிதறும் உன் சிரிப்பாலே
மத்தாப்பாய் சிதறுகிறேனே ...
நெஞ்சம்
வாணவேடிக்கையாய் தவிக்கிறேனே!
====
காரைக்குடி வீடு போல
விசாலமுள்ள உன் உள்ளத்தாலே
குடியேறி வாழுறேனே...
நெஞ்சம்
சொந்தமாகி தவிக்கிறேனே!
====
இராமேஸ்வரம் கடல் போல
முடிவில்லா உன் காதலாலே
கரைதேடி அலையுறேனே...
நெஞ்சம்
அலையாகி தவிக்கிறேனே!
====
கொடைக்கானல் குறிஞ்சிப் போல
அரிதாகும் உன் தரிசனத்தாலே
வருடங்கள் காத்திருக்கேனே...
நெஞ்சம்
பூவாகி தவிக்கிறேனே!
====
கன்னியாகுமரி சூரியோதயம் போல
மலரும் உன் முகத்தாலே
ஒவ்வொரு காலையும் புதுசாச்சே...
நெஞ்சம்
விடியலாகி தவிக்கிறேனே!
---
x

காதலும் அறிவியலும்

 ### 1. ஈர்ப்பு விசை

உன்னை
மறக்க
முயன்றாலும்...
என்
நினைவுகள்
மீண்டும்
உன்னிடமே
விழுகின்றன...

இது
நியூட்டன் 
கண்டுபிடிக்காத 
ஈர்ப்பு விசையா...
இல்லை,
உன்
விழிகளின்
விதியா!

### 2. ஒளியின் வேகம்

உன்
ஒரு
புன்னகை...

என்
இதயத்தை
அடைவதற்கு
ஒளியைக்கூட
முந்துகிறது...

எந்த அலகால்  
அளப்பது !
இந்த வேகத்தை 

### 3. குவாண்டம்

நீ
அருகில்
இல்லை...

ஆனாலும்
என்
இதயத் துடிப்பில்
உன்
இருப்பு...

இது
குவாண்டம்
என்டேங்கிள்மென்ட்டோ!

### 4. காந்தம்

நான்
விலகி
நின்றாலும்...
உன்
மௌனம்
கூட
என்னை
இழுத்துக்
கொண்டே
இருக்கிறது...

என் 
இதயம்
இரும்பல்ல...

ஆனால்,
நீ
காந்தம்தான்!

### 5. வேதியியல்

உன்
பார்வை...

என்
மனதோடு
வினைபுரிந்ததும்
நான்
வேறொரு
மனிதன்...

இது
காதலின்
ரசாயன
மாற்றமோ!

### 6. சுற்றுப்பாதை

நீ
விலகி
சென்றாலும்...

என்
எண்ணங்கள்
மட்டும்
உன்னைச்
சுற்றியே
சுற்றுகின்றன...

நான்தான் 
நிலவா?

நீ
பூமியா?

### 7. கருந்துளை

உன்
கருவிழிக்குள்
ஒருமுறை
விழுந்தேன்...

வெளியே
வரவே
முடியவில்லை...

காதலின்
கருந்துளை
இவ்வளவு
ஆழமா!

### 8. கால விரிவு

நீ
அருகில்
இருக்கும்
நிமிடங்கள்...

நொடியாக
கடக்கின்றன...

நீ
இல்லாத
நொடிகள்...

யுகங்களாய்
நீளுகின்றன...

இதுவும்
ஐன்ஸ்டீனின்
கால விரிவோ!

### 9. அலைநீளம்

உன்
மௌனத்திற்கும்...

என்
இதயத்திற்கும்...

ஒன்றே
அலைநீளம்...

அதனால்தான்
வார்த்தைகள்
தேவைப்படுவதில்லை!

### 10. டி.என்.ஏ.

என்
கவிதைகளின்
ஒவ்வொரு
எழுத்திலும்...

ஒளிந்திருப்பது
உன்
பெயர்தான்...

என்
டி.என்.ஏ-வில்
கூட
நீயே
எழுதப்பட்டிருக்கிறாயோ!

பிரகாரத்தில் பூத்த காதல்

கோவிலுக்குள் 
என்னை 
ஈர்த்தது ...

வாசலில் 
கண்ட 
உனது 
காலணி !!

வசந்ததிற்காக

பூக்களை
படைத்து
விட்டேன்...

பூந்தோட்டத்தில்
சற்று
உலாவிவிட்டு வா!
உன்
சுவாசம் 
தீண்டிய பிறகுதான்...
வாசம்
பிறக்கிறது
பூக்களுக்கு!
==================
உன்
பார்வையில்
பிறக்கும்
மேகங்கள்...

உன்
புன்னகையை
சந்திக்கும்
கணத்தில்...
மழையாகி
பூமியெங்கும்
பொழிகின்றன!
==================
ஆயிரம்
கதைகள்
சொல்லட்டும்
இரவுகள்...

உனக்காக
ஒரு
நிலவை...
இரவின்
விளக்காக
எப்போதும்
சூடியிருக்கிறேன்
நான்!
==================
வசந்தங்களை
நீ
உருவாக்குவதில்லை...

உன்னைத்
தீண்டும்
ஒவ்வொரு
பருவமும்...
வசந்தமாகி
விடுகிறது!
==================
வசந்த காலம் 
எப்போது 
என்கிறாய் ..

வசந்தமே 
ஒரு 
வசந்ததிற்காக 
காத்திருக்கிறதோ !
==================

Wednesday, July 1, 2026

சிட்டுக்குருவி நீ நான்

சிட்டுக்குருவிகள்
கூடு கட்டுகின்றன...

நீயும் நானும் 
அமர்ந்திருக்கும்
இதயங்களைத் தேடி!
===========================
விடியலை
முதலில்
வரவேற்பது ...

கொக்கரக்கோ என்று 
சேவலா ?

இல்லை 
கீச் கீச் என்று 
சிட்டுக்குருவிகளா...?

விவாதித்து
பார்ப்போமா?

ஒரு 
பட்டி மன்றத்தில்!
===========================
சிட்டுக்குருவி
தன்
இணையை
அழைக்கும்
ஒவ்வொரு
குரலிலும்...

நீ என்னையும் 
நான் உன்னையும் 
அழைத்துக்கொள்கிறோம் !
===========================
பனி மலையின் 
உச்சியில் 
சிட்டுக்குருவி...

கொன்றை சூடியவன் ...
கங்கை சூடியவன் ...
இந்த பெயர்களோடு ...

சிட்டுக்குருவி சூடியவன் 
என்றும் 
அழைக்க 
ஆரம்பித்து விடுவார்களோ ?
===========================
சிறு நெல்மணியை 
கிடைத்துவிட்டதாம் ...

இனி நீ 
சிரிக்கலாம் அல்லவா !
===========================
சிட்டுக்குருவியின் 
ஒரு சிறகு நீ ..
மறு சிறகு நான் ...

பறந்தே 
அளந்து பார்க்கலாமா ?

இந்த 
பிரபஞ்சத்தை !
===========================
கூடு
அற்றவர்கள்
நாமல்ல...

சிட்டுக்குருவிகள்
கட்டும்
ஒவ்வொரு
கூடும்...

நமக்காகவே
காத்திருக்கும்
கைலாயம்தானே!
===========================
இயற்கையின்
ரகசியத்தை 
எங்கெங்கோ தேடுகிறார்கள் ...

இயற்கையின் 
இரகசியமே 
நீயும் 
நானும் 
என்றறியாமல் !

மௌனத்தின் மணியோசை

 1

உன்
கொலுசின்
மணியோசைதான்...

என்
இதயத்தின்
அழைப்பு மணி!