Monday, June 29, 2026

வண்ணத்துப் பூச்சியைத் தேடி

மலர்களின்
வண்ணங்களை
யார்
திருடிச்
சென்றார்கள்
என்று
தேடினேன்...

உன்
சிறகுகளில்
அவை
ஒளிந்திருந்தன!
======================
உனக்கும்
பூக்களுக்கு
அப்படியென்ன
தெய்வீகக்
காதல்?

நீ
தேனை
திருடவில்லையென்று 
பூக்கள்
பொய்
சத்தியமே
செய்கின்றனவே!
=========================
பூக்களின் 
தேனை 
மட்டும் 
திருடுவதாக 
நினைத்துக் 
கொள்கிறாய் ...

எப்போது 
திருப்பி 
கொடுப்பாய் 
எனது 
இதயத்தை !!
========================
காகிதப்
பூக்களில்
செயற்கைத்
தேனை
நிரப்பி
வைத்திருக்கிறோம்...

உனக்கு
அது
பிடிக்காதோ?

========================

நீ

அமர்ந்ததும்

பூக்கள்
மலர்வதில்லை...

பூக்கள்
தங்களை
அழகாகவும் 
உணர்கின்றன!
======================

ரோஜாவும்
மல்லிகையும்
காதலிக்கின்றனவோ...

நீ
காதல்
தூது
சுமக்கிறாயோ?

======================
உன்னை
வரைய
முயன்ற
வானவில்...

ஏழு
நிறங்களே
போதவில்லை
என்று
வெட்கப்பட்டு 
பாதியில் 
கலைகிறது !
======================
ஒவ்வொரு
பூவிடமும்
நீ
விசாரிப்பது...

தேனையா?

அல்லது
அதன்
இதயத்தையா?
======================
நான் 
காகிதங்களில் 
எழுதுகிறேன் ...

நீயோ 
பறக்கும்போது 
காற்றிலேயே 
எழுதி விடுகிறாய் ...

பல 
கவிதைகளை !!
======================
உன்
உதடுகளில் 
மலர்களில் 
மகரந்தத்தை 
கவர்ந்து  
எனக்கு
பரிசளிக்கிறாய்...
கவிதையாக !
======================
பூக்கள்
உனக்காக
காத்திருக்கின்றன...
நான்
உன்னைக்
காத்திருக்கிறேன்
சில 
பூக்களோடு !
======================
பூமிக்கு
நிறங்களை
கற்றுக்
கொடுத்தது
ஓவியன்
அல்ல...
நீதான்!
======================
பிள்ளைகளின்
கைகளில்
பிடிபட்ட
நீ...

சில
நொடிகளில்
அவர்களின்
நினைவாகி
விடுகிறாய்!
======================
உன்
வாழ்நாள்
சிறியது...

ஆனால்
நீ
கடந்து
செல்லும்
ஒவ்வொரு
தோட்டமும்
நீண்ட
நினைவுகளை
சுமக்கிறது!
======================
வண்ணத்துப்
பூச்சிகள்
குறைந்ததால்...

மலர்களே
இப்போது
தங்கள்
அழகை
யாருக்குக்
காட்டுவது
என்று
தெரியாமல்
தவிக்கின்றன!
======================
கள்ளுண்ண
பனைகளை 
வளர்க்க 
வேண்டுமாம் ...

நீ
கள்ளுண்ண
பூந்தோட்டங்களை
ஏன்
மறக்கிறார்கள் !
======================
உன்
சிறகின்
ஒரு
துடிப்பு...

பூமி
இன்னும்
உயிரோடு
இருக்கிறது
என்பதற்கான
கையொப்பம்!
======================
நீ
வராத
வசந்தத்தில்...

பூக்கள்
மலர்கின்றன
ஆனால்
புன்னகைக்கவில்லை!
======================
நூலகம்
முழுவதையும்
வாசித்தும்...

என்
கவிதைகள்
இன்னும்
காகிதத்திலேயே!

நீயோ...

ஒரு
தேன் துளியைச்
சுவைத்துவிட்டு

வானமெங்கும்
கவிதையாகப்
பறக்கிறாய்!
======================
உன்னை
வாகனமாக
ஒரு
கடவுள்
வரித்திருந்தால் ...

உனக்கும்
கிடைத்திருக்கும் 
கோவிலில் 
ஒரு
சிலை!

காதலின் ஆறுதல் அகராதி

கூந்தல்
பூக்கள்
வாடி உதிர்கின்றன 
என்று
வருந்தாதே...

உன்னை
அலங்கரிக்கும் 
பாக்கியத்தை
மற்ற
பூக்களும்
பெறட்டுமே
என்று...
அவை
வழிவிட்டிருக்கலாம்!

இயற்கையின் இரகசியம் நீ

ரோஜாவை 
செடியிலிருந்து 
பிரித்து 
பாவம் 
தேடினேன் ..
அதனை 
உன் 
கூந்தலில் 
சேர்த்து 
புண்ணியம் 
நாடினேன் !
==========================
தோட்டத்து 
பூக்களின் 
பிறப்பு 
ரகசியம் 
தேடினேன்  ...
உன் 
கூந்தலை 
காணும் வரை!
==========================
உன்
முகத்தை
ஒருமுறை
கண்டபின்...
நாட்காட்டியில்
பௌர்ணமி
நாளை
நான்
தேடுவதே 
இல்லை!
==========================
தேனீக்களின்
கூட்டை
நான் 
எதற்காக 
தேட வேண்டும் ...
உன்
இதழ்கள்தான்
இருக்கிறதே!
==========================
தென்றலை 
குறித்து 
கவிதைகளை 
எழுதி 
குவித்து வந்தேன் ...
உன் 
மூச்சுக்காற்று 
படும் வரை !!
==========================
நகைக்கடையில் 
முத்துக்களை 
ஏறெடுத்தும் 
நான் 
பார்ப்பதில்லை ..
உன் 
புன்னகையைதான் 
கண்டிருக்கிறேனே  !!
==========================
வண்ணத்து 
பூச்சிகளிடம் 
எனக்கிருந்த 
காதல் 
இடம் மாறிவிட்டது ...
உன்னை 
போச்சம்பள்ளி 
புடவையில் 
கண்ட பின்பு !!
==========================
சந்தனத்தின்  
விளம்பரங்களை 
காணும்போது 
சிரிப்புதான் 
வருகிறது ...
உன் 
ஸ்பரிசம் 
அறிந்த பின்பு !!
==========================
கவிதையைத்
தவிர
வேறெதையும்
பிரசவிக்க
என் பேனா
மறுக்கிறது...
ஒவ்வொரு
நொடியும்
என் மனம்
உன் நினைவுகளை
பிரசவிப்பதால்!
==========================
உனது
நினைவு
மலர்களில்
தேனுண்டு
மயங்கிக்
கிடக்கிறது
எனது
இதயத்தும்பி !

Saturday, June 27, 2026

தும்பியைத் தேடி

பூக்களை 
தேடித்தான் 
வருகிறது 
என்று 
நினைத்திருந்தேன் ...

ஆனால் ...
நீ 
வரும்போது 
வந்துவிடுகிறது 
இந்த 
தும்பி ...
===========================
என் பேனா
காகிதத்தில்
இதழ் பதிக்கும்...
நீ...
பூவின் மீது
இதழ் பதித்தால்!
============================
தேனின்
துளிகளை
சேமித்து வைத்து
காத்திருக்கின்றன
சில
பூக்கள்...
வருவாயோ...?
இனிமையின்
துளிகளை
என்னுள்
சேமித்து வைக்க!
============================
நீ
சிறகசைக்க
காத்திருக்கின்றன
எங்களின்
அசுரக்கண்களுக்கு
தப்பிய
சில
குளக்கரைகள்...
============================
நீ
வட்டமடித்து
பறக்கும்
அழகைத் தேடி
வானெங்கும்
அலைகின்றன
என்னைப்போல
சில
பித்து பிடித்த
மேகங்கள்...
============================
உன்னைப் போலவே
நானும்
தேடுகிறேன்
மழை முடிந்ததும்
வயல்வெளியில்
ஓடிக்கொண்டிருந்த
என்
குழந்தைப்
பருவத்தை!
============================
பூச்சிக்
கொல்லி
மருந்துகள்தானே
போட்டோம்!!
நீயும்
பூச்சி என்பதை
மறந்தோமோ!?
============================
சதுப்பு 
நிலங்களை
நிரப்பி
உனக்கான
தொட்டிலை
அதில்
புதைத்து
விட்டோமோ!?
============================
பூக்கள்
குறைந்ததால்
உன்
படைப்பையும்
பிரம்மன்
குறைத்து
விட்டானோ!?
============================
எங்கள்
அவசர
வாழ்க்கையின்
ஓட்டத்தில்
இயற்கை
உதிர்ந்து 
விட்டதால்
உனக்கான
வான்வழிகள்
வெறுமையாகி
விட்டனவோ!?
============================
என்சைக்கிளோபிடியாவில்
"தும்பி"
என்ற பக்கத்தை
சேர்த்து விட்டோம்..
வருங்காலம்
உன்னை
வரலாறாய்
படிக்க!!
============================
எனது
கவலையெல்லாம்..
எப்படி
வரம் தருவான்
ஈசன் ...?
நீ
தேனுண்ணாத
பூக்களால் 
பூஜித்தால் !
============================

வாசல் காத்த வசந்தம்

வைகறையில்
வெள்ளி நிலா
விடைபெறும்
வேளையிலே...

வாசலெங்கும்
பெருக்கி வைத்து
வாசம் தூவி...

உன்
வரவை வேண்டி
காத்திருப்பது 

வாசற்படி கூடத்தான் !
==============================
ஆற்றங்கரை
மணல் மேலே ...

தினம் தினம் 
கோலம் வரைந்தேன்
உன்னை வரவேற்க ...

ஒவ்வொன்றிலும்
பதிந்திருந்தது ...

உன்
பாதச்சுவடுகள்தான்!
==============================
செம்பொன் நிறம் பூசி 
வியந்து பார்க்கிறது
கிழக்குவானம் ...

உன்
வரவை
தினம் 
கனவு காணும் ...

என்
கன்னங்களில் 
வெட்கத்தில்
செம்பருத்தி
பூப்பதை!
==============================
வரப்போரம்
நெற்கதிர்கள்
தலையசைத்து
பேசுகின்றன...

"எப்போது
வருவான்?"
என்று...

நெல்லுக்கூட
உன்
வரவுக்காகவே
விளைந்திருக்கிறது!
==============================
கிணற்றிலிருந்து
குடம் நிறைய
தண்ணீர்
எடுத்து வைத்திருக்கிறேன் ...

உன்
தாகம் தீர்க்கவே ...

நீ 
அறிவாயோ 
என் 
தாகம் !
==============================
தயாராகத்தான் 
இருக்கிறது 
அறுசுவை உணவு  ...

நீ வந்து 
கொஞ்சம் 
பசியாறினால்போதும் ...

ஆறிவிடும் 
என் 
காதல் பசி !
==============================
அந்தி
வந்து விட்டது ...

அந்தி மந்தாரையும் 
பூத்து விட்டது ...

ஓரறிவு  
மலர்கள் கூட 
காலம் தவறுவதில்லை ..

நீயோ !
==============================
மாலை நேரம்...

மேற்கு வானம்
சோர்ந்து
சாய்ந்தபோதும்...

சோர்வறியாமல்
வாசல் நோக்கி
நீள்கின்றன...

உன்னைத்
தேடும்
என் விழிகள்!
==============================
ஆலமரக்
கிளைகளெல்லாம்...

இணை சேர்ந்த
குருவிகளின்
கீதம்...

ஒற்றைக்
குருவியாய்
தவிக்கும்
என் மனதில் மட்டும்...

உன்
பெயரின் கீதம்!
==============================
தெருவோர
செட்டிக்கடை
விளக்குகள்...

ஒன்றன்பின்
ஒன்றாய்
அணைந்தாலும்...

உன்
வரவை நாடும் 
என் நெஞ்சின்
நம்பிக்கை 
விளக்கு மட்டும்...

அணையவே
மறுக்கிறது!
==============================
காத்திருந்த
காலமெல்லாம்...

காற்றோடுதான்
பேசிப்
பொழுதைக்
கழித்தேன்...

அந்த 
காற்றுகூட 
கொண்டு சேர்க்கவில்லையோ 
எனது காதலை !
==============================
நான்
மறைந்து
போனாலும் ...

என்றாவது 
ஒரு நாள் 
நீ வரும்போது ...

வாசலெங்கும் 
விரிந்து கிடைக்கும்
என்
கூந்தல்
மலர்களிடம்
கேட்டுப்பார் ..

மலர்கள் சொல்லும் 
என் காத்திருப்பின் 
சாட்சி !
==============================
காலம்
கடந்து...

நீ
வரும்
நாளில்...

வாசல்
மலர்கள்
உன்
பாதங்களை
தீண்டி
சுட்டுவிட்டால்...

கோபம்
கொள்ளாதே.

மலர்களும் 
அறியும் ...

என்
காத்திருப்பின்
காயங்களை!

சோளக்காட்டு பொம்மை

பறந்தாடும்

வண்ணத்துப்பூச்சி

உன் சேலை

நிறம் தேடும்!


விடியற்காலை

பனித்துளியும்

உன் சிரிப்பை

கடனாய் கேட்கும்!


வரப்போரம்

நீ நடந்த

பாதச்சுவடும்!

மழை நீரில் 

கரையாமல் 

மனதை கரைக்கும்!


வயல் காக்கும்

சோளக்காட்டு பொம்மை 

என் காதலையும் 

மௌனமாய் காக்கும்!


Monday, June 15, 2026

வேலவா முருகா

 

பல்லவி

வேலவா முருகா என் வாழ்வின் தீபமே
வெற்றியின் பாதையில் வழிகாட்டும் தெய்வமே
மயில்மேல் வந்தருளும் மலரடி நாயகா
மனமெங்கும் நீயன்றி வேறில்லை முருகா!


அனுபல்லவி

ஆறுபடை வீடுகள் அருளொளி வீசுதே
ஆனந்த கீதங்கள் அகமெங்கும் பாடுதே
சூரனை வென்ற உன் சுடர்வேல் காப்பதே
சோதனை வந்தாலும் துணையாக நிற்பதே


சரணம் 1

பழனி மலைமேல் நீ பசுமையின் அழகாய்
பக்தர்கள் இதயத்தில் பரிவொளி மழையாய்
கழுகுமலை காற்றிலும் உன் நாமம் இசையாய்
கண்ணீரைத் துடைத்திடும் கருணையின் நிழலாய்

கந்தனே குமரனே கற்பக மரமாய்
கைதூக்கி வேண்டினால் கனவுகள் நனவாய்
செந்தமிழ் பாடலின் செழுமையாய் மலர்ந்து
சிந்தையில் என்றும் நீ சிரித்திடும் நிலவாய்


சரணம் 2

திருச்செந்தூர் அலைகளில் திருநாமம் ஒலிக்க
திருப்பரங்குன்றத்தில் தேவர்கள் துதிக்க
பழமுதிர்சோலையில் பறவைகள் இசைக்க
பக்தியின் பாதையில் பாவங்கள் கரைய

வள்ளியும் தெய்வானையும் அருகினில் கொண்டு
வானவர் போற்றிடும் வடிவழகோடு நின்று
வெள்ளியெனத் தூய மனம் வேண்டுவோர்க்கெல்லாம்
வேலொளியாய் வந்தருளும் வெற்றிவேல் முருகா! 🎶🙏🏻

Sunday, June 14, 2026

மீண்டும் கிராமியம்


மல்லிகைப்பூ வாசத்தத்தான்
மனசுக்குள்ள நிரப்பி வச்ச
மழைத் துளிய கன்னத்திலே
முத்தமிட்டு சிதற வச்ச

கல்லு மேல உக்காந்து நானும்
கனவுக்குள்ள மிதக்க வச்ச
கண்ணுக்குள்ள ஓரப் பார்வை
கட்டி போட்டு இழுக்க வச்ச

வெள்ளை நிலா வெளிச்சத்துல
வெட்கம் பூக்க பழக்கி வச்ச
வீதி முழுக்க உன் பேரத்தான்
வீணையாட்டம் இசைக்க வச்ச

ஆத்தோரம் துணி தொவைக்க
போற புள்ள தங்கப் புள்ள
ஏத்தி வச்ச என் ஆசையெல்லாம்
ஏத்துக்கிட்டு வாடி புள்ள!

---

நெல்லு வயல் காற்றத்தான்
நெஞ்சுக்குள்ள வீச வச்ச
நேரம் காலம் மறந்துபோக
நெத்திக்குள்ள பூச வச்ச

தென்னை மர நிழலுக்குள்ள
தேடித் தேடி அலைய வச்ச
தேனடை சிரிப்புலதான் 
தேகம் மொத்தம் கரைய வச்ச

சின்ன சின்ன கோபத்தால
சித்திரமாய் வதைக்க வச்ச
சீலை ஓரம் காத்தாட 
சிந்தனைய பறக்க வச்ச

கோவில் பாதை நடந்து போற
கொக்கு நடையழகுப் புள்ள!
கூப்பிட்டதும் திரும்பிப் பார்த்தா
கோடி சந்தோசம் கூடும் புள்ள!

---

ஆலமரத்து விழுதைப் போல
ஆசை நெஞ்சில் ஊன்றி வச்ச
ஆத்தங்கரை மணலப் போல
ஆயிரம் கனவ தூவி வச்ச

மீனு துள்ளும் குளத்தோரம்
தெனம் வந்து நிற்க வச்ச
மேக நிழல் போல மனசை
மெத்த மெத்த நனைக்க வச்ச

ஓரப்பார்வை பாத்து போற 
பாதி உயிர எடுத்துப் போற 
பாவாடை தாவணியில 
பருவக் காதல் வெதச்சு போற 

காட்டுப் பாதை தனியா போற
கருங்குயிலே மானே புள்ள
கைய பிடிச்சு நடக்கத்தானே
காத்திருக்கேன் வாடி புள்ள!

சக்தி பூக்கடை

பூக்கடை
வாசலில்
நிற்கிறேன்...
பூக்களின்
வாசமா
உன்
வாசமா!?
==================
பூக்களை
முழம் போட்டு
அளக்கிறாய்...
ஆனால்
உன்
அழகை
நான்
எதில்
அளப்பது!?
==================
மல்லிகை
சரங்கள்
தொங்குகின்றன...
உன்
சிரிப்புதானோ 
அவற்றின்
விலைப்பட்டியல்!?
==================
வாடாமல் இருக்க 
பூக்களுக்கு
தண்ணீர்
தெளிக்கிறாய்...
என்
இதயத்திற்கு
எப்போது
காதலை 
தெளிப்பாய் !?
==================
கூடையெங்கும்
பூக்கள்...
ஆனாலும்
என்
பார்வையை 
பறிப்பது
உன் 
கூந்தல் மலரே !
==================
பூக்களை
கட்டுகிறாய்...
அதோடு
என்
மனதையும்
கட்டிவிடுகிறாய்!
==================
மலர்களுக்கு
முள்
இருக்கிறது...
உனக்கு
விழிகள்
இருக்கின்றன!
==================
வாசம்
விற்கும்
கடைதான்...
ஏனோ
என்
மூச்சையே
வாங்கிக்
கொள்கிறது!
==================
பூக்கள் 
வகை வகையாய் 
அழகு !
நீயோ 
எல்லா 
வகை 
பூக்களும் 
சேர்ந்த 
அழகு !
==================
பூக்கள்
காலையில்
மட்டுமே
மலர்கின்றன...
நீயோ
எந்நேரமும்!
==================
கூடையில்
பூக்கள்
குறைந்துகொண்டே
போகின்றன...
என்
காதல்
அதிகரித்துக்
கொண்டே
போகிறது!
==================
பூக்காரி
என்பதாலா ...
என்
மனதிற்குள்
பூந்தோட்டத்தையே 
போடுகிறாய் !?
==================
ஒரு
ரோஜாவிற்கு
விலை
கேட்டேன்...
உன்
புன்னகையை
காட்டிவிட்டாய்!
எங்கே 
போவது !?
அவ்வளவு 
பணத்திற்கு !?
==================
பூக்கள்
வாடினாலும் ...
அவற்றை
விற்ற
உன்
நினைவு
வாடாதே!
==================
விலை 
மதிப்பில்லாதது 
எது ?
உன் 
கைகள் தரும் 
பூக்களா !?
உன் 
கூந்தல் 
மலர்களா !?
==================
நன்றாக 
பார் ...
உன் 
கூந்தலேறிய 
பூக்கள் 
மகிழ்ச்சியிலும் ..
கூடை 
மலர்கள் 
தவிப்பிலும் 
இருப்பதை !!
==================
உன் 
புன்னகை 
மலர்களை 
கண்டபின்னும் 
உன் 
கூடை 
மலர்களை 
விரும்புபவர்கள் 
இருக்கிறார்களா 
இந்நாட்டில் !?
==================
பக்தனாக 
வந்தவனை 
கவிஞனாக்கி
விட்டாய்...

==================
வா !
சகி !
நீயே 
என் 
கவிதைகளின் 
முதல்
வாசகி !! 
==================
கோவிலுக்குள் 
போய் வருபவர்கள் 
பக்தர்களாக 
வருகிறார்களோ 
இல்லையோ !!
உன் 
கடையை 
தாண்டும்போது 
கவிஞனாகி 
விடுகிறார்கள் !!
==================

ஆத்தோரம் ஆலமரம்

ஆத்தோரம் ஆலமரம்
மரத்தடியில் நீ நிக்கையிலே
ஆலிலையில் பிறந்த காத்து
உன்னை மட்டும் தொட்டுச் செல்ல
எனக்குள்ளே வெம்மையடி!

வயலோரம் வரப்புமேல
வசந்தமா நீ நடக்கையிலே
பச்சை நெல்லின் அசைவுக்கெல்லாம்
உன் கொலுசின் ஓசை வந்து
மெட்டுக்கட்டி பாடுதடி !

பனிமலையின் அடியோரம் 
கனிவோடு நீ நடந்தால் !
கால் கொலுசின் நாதத்திலே 
கயிலையும் கரைந்திடுமோ !?

மாலை நேரம் மேற்குவானம்
மஞ்ச நிறம் பூசிக்கிட்டு
சூரியனும் மறையையிலே
உன் கன்னச்சிவப்பழகு 
அந்தி வானை வெல்லுதடி!

மாலை நேரம் பனி மலையில்  
மஞ்சள் ஒளி சாய்கையிலே
அந்தி வானின் செவ்வழகும் 
உன்னழகில் பிறந்ததன்றோ!?

தென்னையடி தோட்டத்திலே 
குடம் தூக்கி நீ வருகையிலே
கெணத்திலுள்ள தண்ணியெல்லாம்
உன் மொகத்த பாத்துபுட்டு 
அலையடிச்சு சிரிக்குதடி!

மனம் என்னும் ஏரியில் ..
ஆசை என்ற கற்களை ..
அள்ளி அள்ளி வீசுவார் !
மதியிழந்து வாடுவார் !

மாசு தொடா நீர்போல ...
தெளிவோடு மனமிருந்தால் ..
உனதருள் அலையும் வீசாதோ !!
மனதுள் கயிலாயமும் மலராதோ !! 

பூந்தோட்டப் பாதையிலே
புன்னகைத்து நீ நடக்கையில
உன் கூந்தல் வாசம் கண்டு 
தோட்டத்து பூக்களெல்லாம் 
மதி மயங்கி பார்க்குதடி !

பூக்களாய் பிறப்பதற்கே
புண்ணியம் 
வேண்டுமெனில்...
உன் 
நந்தவனத்தில் மலர
பெருந்தவமும் வேண்டுமோ !?
உன் கூந்தலை 
அலங்கரிக்கும் பேறு
எத்தவத்தால் கிட்டுமோ?

சாரல் மழை பெய்யையிலே
சன்னலோரம் நீ நிக்கையிலே
தெறித்து வந்த மழைத்துளிக்கு 
உன் உதட்டில் கெடச்ச சொகம்
எனக்கும்தான் கெடைக்குமோடி!

அமுதம் எனப்படுவது ..
பாற்கடலில் 
பிறந்ததோ !?
இல்லை ...
உன் 
இதழ் தொட்டு  
சிதறிய 
சிறு 
சாரல் துளியோ !?

நதியோரம் மணல்வெளியில்
நாணலாய் நீ நடக்கையிலே
உன் பாதம் பட்ட இடமெல்லாம்
சின்னச் சின்ன பூக்களாக
மனசுக்குள்ள மலருதடி!

இமயத்தின் 
வெண்பனியில் ...
இளங்காற்றாய் 
நீ நடக்கையிலே ...
உன் காலடி 
பதித்த இடமெல்லாம்
பூப்பது ...
மலர்களா  !?
என் இதயமா !?

தென்றலோடு வந்த நிலா
தேடி உன்னைப் பாக்கையிலே
நிலவுக்கே வந்த மயக்கம்
என் விழிக்கும் வந்ததாலே
மனசெல்லாம் காதலடி!

சடை மேல் 
அமர்ந்த நிலா ..
சக்தி உன்னை 
கண்டதாலே ...
உன்னழகில் 
மதி மயங்கி ..
நாணிக்கொஞ்சம் 
தேய்ந்ததோ  !?