நிலவு
தென்றல்
மழை
மலை
அருவி
என
கவிதை சொல்ல
ஆசைதான் ...
என்ன
செய்வது ..
உன்
விழிகள்
மட்டும்தானே
கவிதை
பாடம்
நடத்துகின்றன !
=================
எதைப்பற்றி
சிந்தித்தாலும்
அதற்குள்
நீ
வந்து விடுகிறாய் ...
கவிதையாக !!
================
என்
இதயம்
துளைக்கும்
உனது
விழிகளை விடவா
இன்னொரு
கூர்மையான
ஆயுதத்தை
இவ்வுலகம்
கண்டு
பிடித்துவிடப்போகிறது !!
===================
நம்
காதலை
நான்
சந்தித்து விட்டேன் ...
நீ
எப்போது
சந்திக்க
போகிறாய் !
===========
எனது
காதல்
தேசத்தின்
சர்வாதிகாரி
நீ
==========
உன்னை
படைத்தபிறகுதான்
தன்னை
படைப்பாளி
என்று
சொல்லிக்கொள்கிறானாம் ..
பிரம்மன் !!
=====================
தினம் தினம்
காதல்
திருவிழாதான்
எனக்கு ...
இதய கோவிலில்
உன்னை
வைத்து
தினம்
இழுக்கிறேனே !!
====================
உனது
இதயக்கோவிலுக்கு
நேர்ந்து
விட்டிருக்கிறேன்
என்
காதலை ...
என்ன
செய்ய
போகிறாய் !!
x
No comments:
Post a Comment