Friday, September 27, 2024

இதயம்

 நிலவு 
தென்றல் 
மழை 
மலை 
அருவி 
என 
கவிதை சொல்ல 
ஆசைதான் ...
என்ன 
செய்வது ..
உன் 
விழிகள் 
மட்டும்தானே 
கவிதை 
பாடம் 
நடத்துகின்றன !
=================
எதைப்பற்றி 
சிந்தித்தாலும் 
அதற்குள் 
நீ 
வந்து விடுகிறாய் ...
கவிதையாக !!
================
என் 
இதயம் 
துளைக்கும் 
உனது 
விழிகளை விடவா 
இன்னொரு 
கூர்மையான 
ஆயுதத்தை 
இவ்வுலகம் 
கண்டு 
பிடித்துவிடப்போகிறது !!

===================

நம் 
காதலை 
நான் 
சந்தித்து விட்டேன் ...
நீ 
எப்போது 
சந்திக்க 
போகிறாய் !
===========
எனது 
காதல் 
தேசத்தின் 
சர்வாதிகாரி 
நீ 
==========
உன்னை 
படைத்தபிறகுதான் 
தன்னை 
படைப்பாளி 
என்று 
சொல்லிக்கொள்கிறானாம் ..
பிரம்மன் !!
=====================  
தினம் தினம் 
காதல் 
திருவிழாதான் 
எனக்கு  ...
இதய கோவிலில் 
உன்னை 
வைத்து 
தினம் 
இழுக்கிறேனே !!
====================
உனது 
இதயக்கோவிலுக்கு 
நேர்ந்து 
விட்டிருக்கிறேன் 
என் 
காதலை ...
என்ன 
செய்ய 
போகிறாய் !!
x

No comments:

Post a Comment