Friday, September 27, 2024

இதயம்

 நிலவு 

தென்றல் 

மழை 

மலை 

அருவி 

என 

கவிதை சொல்ல 

ஆசைதான் ...


என்ன 

செய்வது ..


உன் 

விழிகள் 

மட்டும்தானே 

கவிதை 

பாடம் 

நடத்துகின்றன !


=================


எதைப்பற்றி 

சிந்தித்தாலும் 

அதற்குள் 

நீ 

வந்து விடுகிறாய் ...

கவிதையாக !!

================


என் 

இதயம் 

துளைக்கும் 

உனது 

விழிகளை விடவா 

இன்னொரு 

கூர்மையான 

ஆயுதத்தை 

இவ்வுலகம் 

கண்டு 

பிடித்துவிடப்போகிறது !!


===================

நம் 
காதலை 
நான் 
சந்தித்து விட்டேன் ...
நீ 
எப்போது 
சந்திக்க 
போகிறாய் !
===========
எனது 
காதல் 
தேசத்தின் 
சர்வாதிகாரி 
நீ 
==========
உன்னை 
படைத்தபிறகுதான் 
தன்னை 
படைப்பாளி 
என்று 
சொல்லிக்கொள்கிறானாம் ..
பிரம்மன் !!
=====================  
தினம் தினம் 
காதல் 
திருவிழாதான் 
எனக்கு  ...
இதய கோவிலில் 
உன்னை 
வைத்து 
தினம் 
இழுக்கிறேனே !!
====================
உனது 
இதயக்கோவிலுக்கு 
நேர்ந்து 
விட்டிருக்கிறேன் 
என் 
காதலை ...
என்ன 
செய்ய 
போகிறாய் !!
x

No comments:

Post a Comment