கோலம் போட்டு ரசிப்பவளே
எந்தன் வீட்டு வாசலிலும்
உந்தன் கோலம் வருமோடி
வெட்டி போட்ட விரல் நகமும்
பிறை நிலவா தெரியுதடி
பொட்டு வச்ச தங்க முகம்
பௌர்ணமியா ஜொலிக்குதடி
அழகு மதி உன்னை கண்டு
அர்ச்சகர் குழம்பி போனாரடி
பௌர்ணமி திதி இன்னைக்குன்னு
பூஜையும்தான் ஆலயத்தில் நடக்குதடி
No comments:
Post a Comment