Thursday, January 14, 2021

இன்பத்து பாலும் நீயன்றோ

 கருவிழி மையூற்றி 

இதழ் வரியால் 

இதய ஏட்டில் 

எழுதுகிறாய் கவிதை தினம் !


மன மொழி மெய்யால் 

கொஞ்சி அமுதிடவே 

வாராமல் போனாலோ 

நானோர் நடை பிணம் !


உன் கனவே  அறம் 

உன் நினைவே பொருள் 

இன்பத்து பாலும் நீயன்றோ !


காதலெனும் அறத்தில் 

வாழ்வின் பொருள் காண  

பூவுலகின் இன்பமே வாராயோ !

No comments:

Post a Comment