Saturday, August 31, 2024
பாதை
Sunday, August 11, 2024
பூவாய்
சருகாய்
கிடந்தேன் ....
உன்
காலடி
பட்டதில்
மலர்ந்தேன்
பூவாய் !
தாகத்தில்
தவித்தேன்
பாலையில் ...
வந்தாய்
பனி
மழையாய் !!
கோடை
வெயிலிலும்
துணிவாய்
நடப்பேன் ...
உனது
நினைவுகளே
குடையாய் !!
அன்று
எண்ணங்கள்
இருந்தன
சிறகாய் ...
இன்று
அவையே
வீழ்ந்தன
சருகாய் !!
Friday, August 9, 2024
வயல் காற்று
எருக்கிலைக்கு
தண்ணீர் கட்டி
எத்தனை பூ
பூத்தாலும் ...
மருக்கொழுந்து
வாசம் வருமோ
தென் பழனி
வேலவனே!
===============
உச்சியிலே
சடையிருக்க ...
உள்ளங்கையில்
வேலிருக்க ...
நெற்றியிலே
நீறிருக்க ...
என்
நினைவு தப்பி
போவதென்ன !!
================
காவடி
வருகுதென்று
கரடேறி
பார்த்ததென்ன ..
கான மயில் கண்டு
சிந்தை
முழுதும்
அழிந்ததென்ன !!
=====================
மயில்
வரும்
பாதையில் ...
பருந்தாய்
சில
நினைவுகள்..
வட்டமிட்டு
தவிப்பதென்ன !!
==================
ஆட்டு மந்தை
கூட்டத்திலே
வேங்கை
வந்து
பாய்ந்ததுபோல் ..
வேல் வீச்சு
விழியிரண்டும் ...
சிந்தைகளை
சிதறடிப்பதென்ன !!
=====================
அழகாய்
பூத்தொடுக்க
அந்தி மல்லி
பூவிருக்க ...
மந்தியென்
மனம் பறித்து
பூச்சூடி
ஆவதென்ன !!
===============
வாடாமல்லி
ஒரு காசு ...
செண்டு மல்லி
ஒரு காசு ...
வட்டமல்லி
ஒரு காசு ...
செவந்தி பூவு
ஒரு காசு ...
கணக்கு போட்டு
பார்த்தாலும்
உன் வாசம்
போலில்லை
மல்லிகையே !!
============
ஆத்து மீனு
அரைக்காசு ...
அயிரை மீனு
அரைக்காசு ...
கெண்டை மீனு
அரைக்காசு ...
கெளுத்தி மீனும்
அரைக்காசு ...
உன்
விழி மீனு
எத்தனை காசு ...
தவிக்குதடி
என்னுசுரே !!
==========
நெல்லு
விளையட்டும்
தஞ்சயிலே ...
சோளம்
விளையட்டும்
கடலூரிலே ..
உன்
மனதில்
காதல்
விளைந்தாலன்றி
என்
பஞ்சம்
தீர்ந்திடுமோ
பூங்குயிலே !!
===============
கிழவன்தானடி ..
வாலிப
கவிஞனாகி
விடுகிறேன் ...
உன்னோடு
நடக்கையிலே !
================
விறகு
கட்டைகளை கூட
தலையில்
அனாயாசமாக
சுமந்து
விடுகிறாய்
நீ ...
பூப்போன்ற
உன்
நினைவுகளை
சுமக்க
முடியாமல்
தடுமாறுகிறேன்
நான் !
================
Saturday, August 3, 2024
துளி மழை
விழுந்து
சிறு
மழைத்துளியே
அடை மழையாய்
நனைக்கிறது
என்னை !!
==============================
சிறு
துளிப்பார்வையே
நனைக்கிறது
என்னை
அடை மழையாய் !!
==============================
அடை மழையாய்
ஆர்ப்பரித்து
கடந்து விட்டாய் ...
இன்னமும்
சிலிர்ப்பு
தீரவில்லை
எனக்கு !!
=====================
மழையாய்
உனது
பார்வை
பட்டாலும் ...
அடை மழையாய்
எனக்குள்
பெருக்கெடுக்கிறது
மோகம் !!
======================
Friday, August 2, 2024
வயநாடு
யார்
செய்த
பாவங்களை
கழுவி
தள்ளினாய்
மழையே !!
============================
பாதகங்களை செய்தவர்
பங்களாக்களில்
படுத்துறங்க
பாமரன் மேல்
ஏனிந்த
பகை !!
============================
வஞ்சத்தில்
கோடிகள்
சேர்த்தவருக்கு
பாலூட்டுகிறாய் ...
பஞ்சத்தில்
இருப்பவனுக்கு
பாலூற்றுகிறாய்!!
======================
ஊழலில்
திளைப்பவன்
கோடிகளில்
படுத்துறங்க
ஏழையை
தெருக்கோடியிலும்
உறங்க விட
மறுக்கிறாய் !!
==========================
நீ
கழுவி
ஊற்றுவது
மலைகளை
அல்ல ...
உயிர்களை !!