Saturday, August 31, 2024

பாதை

வாழ்க்கை 
என்னும் 
பாதையில் 
காதல் 
என்னும் 
நிறுத்தத்தில் 
காத்திருக்கிறேன்...

எந்த
பேருந்தில் 
வருகிறாய்!!?

================================÷
உனக்காக 
காத்திருக்கும் 
ஒவ்வொரு 
நொடியும்...
நெஞ்சை 
கிழித்தவாறே 
நகர்கின்றன...

கடிகார
முட்கள் 
==================================


வியர்க்கிறது...

கொஞ்சம் 
அனுப்பிவிடு 
உனையே 
சுற்றிக் 
கொண்டிருக்கும் 
தென்றலை!!!
==================================
ம்...
என்றாள் 
அவள்  ....

ஆகா
என்ன 
அருமையான
கவிதை...
நீயும் 
எழுதறியே 
என்று 
என்னை
முறைத்தது 
நிலா!!

==================================

நீ
புன்னகைக்கும் 
நேரமெல்லாம் 
என்
காதல்
வயலில் 
பயிராகி 
விடுகின்றன ...

ஒரு கோடி 
கவிதைகள்!!!

================================

இளையராஜா 
இசைஞானி 
என்றால்...

இசையாய் 
சிரிக்கும் 
உன்னை 
என்னவென்று 
சொல்வது!!!

==================================

அகராதியை 
புரட்டி 
வார்த்தைகளை 
தேடிக்கொண்டிருந்தேன்
நான்...

மௌன மொழியிலேயே 
கவிதை 
எழுதிக்கொண்டிருந்தாள் 
அவள்!!!!
=====================================
எனது
ஒவ்வொரு 
நாட்குறிப்பையும் 
எழுதாமலே 
நிரப்பி விடுகின்றன..

உனது 
நினைவுகள் 
====================================
எனது
கற்பனை 
வானில் 
தினம் 
பௌர்ணமி....

நிலவாய் 
நீயிருப்பதால்...
=====================================


Sunday, August 11, 2024

பூவாய்

 சருகாய் 

கிடந்தேன் ....


உன் 

காலடி 

பட்டதில் 

மலர்ந்தேன் 

பூவாய் !


தாகத்தில் 

தவித்தேன் 

பாலையில் ...


வந்தாய் 

பனி 

மழையாய் !!


கோடை 

வெயிலிலும் 

துணிவாய் 

நடப்பேன் ...


உனது 

நினைவுகளே 

குடையாய் !!


அன்று 

எண்ணங்கள் 

இருந்தன 

சிறகாய் ...


இன்று 

அவையே 

வீழ்ந்தன 

சருகாய் !!


Friday, August 9, 2024

வயல் காற்று

  
எருக்கிலைக்கு 
தண்ணீர் கட்டி 
எத்தனை பூ 
பூத்தாலும் ...
மருக்கொழுந்து 
வாசம் வருமோ 
தென் பழனி 
வேலவனே!
===============
உச்சியிலே 
சடையிருக்க ...
உள்ளங்கையில் 
வேலிருக்க ...
நெற்றியிலே 
நீறிருக்க ...
என் 
நினைவு தப்பி 
போவதென்ன !!
================
காவடி 
வருகுதென்று 
கரடேறி 
பார்த்ததென்ன ..
கான மயில் கண்டு 
சிந்தை 
முழுதும் 
அழிந்ததென்ன !!
=====================
மயில் 
வரும் 
பாதையில் ...
பருந்தாய் 
சில
நினைவுகள்..
வட்டமிட்டு 
தவிப்பதென்ன !!
==================
ஆட்டு மந்தை 
கூட்டத்திலே 
வேங்கை 
வந்து 
பாய்ந்ததுபோல் ..
வேல் வீச்சு 
விழியிரண்டும் ...
சிந்தைகளை 
சிதறடிப்பதென்ன !!
=====================
அழகாய் 
பூத்தொடுக்க 
அந்தி மல்லி 
பூவிருக்க ...
மந்தியென் 
மனம் பறித்து 
பூச்சூடி 
ஆவதென்ன !! 
===============
வாடாமல்லி 
ஒரு காசு ...
செண்டு மல்லி 
ஒரு காசு ...
வட்டமல்லி 
ஒரு காசு ...
செவந்தி பூவு 
ஒரு காசு ...
கணக்கு போட்டு 
பார்த்தாலும் 
உன் வாசம் 
போலில்லை 
மல்லிகையே !!
============
ஆத்து மீனு 
அரைக்காசு ...
அயிரை மீனு 
அரைக்காசு ...
கெண்டை மீனு 
அரைக்காசு ...
கெளுத்தி மீனும் 
அரைக்காசு ...
உன் 
விழி மீனு 
எத்தனை காசு ...
தவிக்குதடி 
என்னுசுரே !!
==========
நெல்லு 
விளையட்டும்
தஞ்சயிலே ...
சோளம் 
விளையட்டும்
கடலூரிலே ..
உன் 
மனதில் 
காதல் 
விளைந்தாலன்றி 
என் 
பஞ்சம் 
தீர்ந்திடுமோ 
பூங்குயிலே !!
===============
கிழவன்தானடி ..
வாலிப 
கவிஞனாகி 
விடுகிறேன் ...
உன்னோடு 
நடக்கையிலே !
================
விறகு 
கட்டைகளை கூட 
தலையில் 
அனாயாசமாக 
சுமந்து 
விடுகிறாய் 
நீ ...
பூப்போன்ற 
உன் 
நினைவுகளை 
சுமக்க 
முடியாமல் 
தடுமாறுகிறேன் 
நான் !
================

வயல் காற்று கவிதைகள்


Saturday, August 3, 2024

துளி மழை

உன் மீது 
விழுந்து 
தெறித்த
சிறு 
மழைத்துளியே 
அடை மழையாய் 
நனைக்கிறது 
என்னை !!

==============================

உனது 
சிறு 
துளிப்பார்வையே 
நனைக்கிறது 
என்னை 
அடை மழையாய் !!

==============================

சில வினாடிகளே 
அடை மழையாய் 
ஆர்ப்பரித்து 
கடந்து விட்டாய் ...

இன்னமும் 
சிலிர்ப்பு 
தீரவில்லை 
எனக்கு !!

=====================

சாரல் 
மழையாய் 
உனது 
பார்வை 
பட்டாலும்  ...

அடை மழையாய் 
எனக்குள் 
பெருக்கெடுக்கிறது 
மோகம் !!

======================

அடை மழை 
என்ன 
செய்துவிடும் 
என்னை  ...

உனது 
கடைக்கண் 
பார்வைதான் 
அதிர வைக்கிறது 
பிரளயமாக !!
=============

தண்ணீரோடு 
சில
நினைவுகளையும் 
கொட்டிப்போகிறது 
அடை மழை !!

Friday, August 2, 2024

வயநாடு

 


யார் 

செய்த 

பாவங்களை 

கழுவி 

தள்ளினாய் 

மழையே !!


============================


பாதகங்களை செய்தவர் 

பங்களாக்களில் 

படுத்துறங்க 

பாமரன் மேல் 

ஏனிந்த 

பகை !!


============================


வஞ்சத்தில் 

கோடிகள் 

சேர்த்தவருக்கு 

பாலூட்டுகிறாய் ...


பஞ்சத்தில் 

இருப்பவனுக்கு 

பாலூற்றுகிறாய்!!

======================

ஊழலில் 

திளைப்பவன் 

கோடிகளில் 

படுத்துறங்க 


ஏழையை

தெருக்கோடியிலும் 

உறங்க விட 

மறுக்கிறாய் !!


==========================


நீ 

கழுவி 

ஊற்றுவது 

மலைகளை 

அல்ல ...


உயிர்களை !!