Saturday, August 31, 2024

பாதை

வாழ்க்கை 
என்னும் 
பாதையில் 
காதல் 
என்னும் 
நிறுத்தத்தில் 
காத்திருக்கிறேன்...

எந்த
பேருந்தில் 
வருகிறாய்!!?

================================÷
உனக்காக 
காத்திருக்கும் 
ஒவ்வொரு 
நொடியும்...
நெஞ்சை 
கிழித்தவாறே 
நகர்கின்றன...

கடிகார
முட்கள் 
==================================


வியர்க்கிறது...

கொஞ்சம் 
அனுப்பிவிடு 
உனையே 
சுற்றிக் 
கொண்டிருக்கும் 
தென்றலை!!!
==================================
ம்...
என்றாள் 
அவள்  ....

ஆகா
என்ன 
அருமையான
கவிதை...
நீயும் 
எழுதறியே 
என்று 
என்னை
முறைத்தது 
நிலா!!

==================================

நீ
புன்னகைக்கும் 
நேரமெல்லாம் 
என்
காதல்
வயலில் 
பயிராகி 
விடுகின்றன ...

ஒரு கோடி 
கவிதைகள்!!!

================================

இளையராஜா 
இசைஞானி 
என்றால்...

இசையாய் 
சிரிக்கும் 
உன்னை 
என்னவென்று 
சொல்வது!!!

==================================

அகராதியை 
புரட்டி 
வார்த்தைகளை 
தேடிக்கொண்டிருந்தேன்
நான்...

மௌன மொழியிலேயே 
கவிதை 
எழுதிக்கொண்டிருந்தாள் 
அவள்!!!!
=====================================
எனது
ஒவ்வொரு 
நாட்குறிப்பையும் 
எழுதாமலே 
நிரப்பி விடுகின்றன..

உனது 
நினைவுகள் 
====================================
எனது
கற்பனை 
வானில் 
தினம் 
பௌர்ணமி....

நிலவாய் 
நீயிருப்பதால்...
=====================================


No comments:

Post a Comment