என்னும்
பாதையில்
காதல்
என்னும்
நிறுத்தத்தில்
காத்திருக்கிறேன்...
எந்த
பேருந்தில்
வருகிறாய்!!?
================================÷
உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நொடியும்...
நெஞ்சை
கிழித்தவாறே
நகர்கின்றன...
கடிகார
முட்கள்
==================================
வியர்க்கிறது...
கொஞ்சம்
அனுப்பிவிடு
உனையே
சுற்றிக்
கொண்டிருக்கும்
தென்றலை!!!
==================================
ம்...
என்றாள்
அவள் ....
ஆகா
என்ன
அருமையான
கவிதை...
நீயும்
எழுதறியே
என்று
என்னை
முறைத்தது
நிலா!!
==================================
நீ
புன்னகைக்கும்
நேரமெல்லாம்
என்
காதல்
வயலில்
பயிராகி
விடுகின்றன ...
ஒரு கோடி
கவிதைகள்!!!
================================
இளையராஜா
இசைஞானி
என்றால்...
இசையாய்
சிரிக்கும்
உன்னை
என்னவென்று
சொல்வது!!!
==================================
அகராதியை
புரட்டி
வார்த்தைகளை
தேடிக்கொண்டிருந்தேன்
நான்...
மௌன மொழியிலேயே
கவிதை
எழுதிக்கொண்டிருந்தாள்
அவள்!!!!
=====================================
எனது
ஒவ்வொரு
நாட்குறிப்பையும்
எழுதாமலே
நிரப்பி விடுகின்றன..
உனது
நினைவுகள்
====================================
எனது
கற்பனை
வானில்
தினம்
பௌர்ணமி....
நிலவாய்
நீயிருப்பதால்...
=====================================
No comments:
Post a Comment