சருகாய்
கிடந்தேன் ....
உன்
காலடி
பட்டதில்
மலர்ந்தேன்
பூவாய் !
தாகத்தில்
தவித்தேன்
பாலையில் ...
வந்தாய்
பனி
மழையாய் !!
கோடை
வெயிலிலும்
துணிவாய்
நடப்பேன் ...
உனது
நினைவுகளே
குடையாய் !!
அன்று
எண்ணங்கள்
இருந்தன
சிறகாய் ...
இன்று
அவையே
வீழ்ந்தன
சருகாய் !!
No comments:
Post a Comment