Friday, August 9, 2024

வயல் காற்று

  
எருக்கிலைக்கு 
தண்ணீர் கட்டி 
எத்தனை பூ 
பூத்தாலும் ...
மருக்கொழுந்து 
வாசம் வருமோ 
தென் பழனி 
வேலவனே!
===============
உச்சியிலே 
சடையிருக்க ...
உள்ளங்கையில் 
வேலிருக்க ...
நெற்றியிலே 
நீறிருக்க ...
என் 
நினைவு தப்பி 
போவதென்ன !!
================
காவடி 
வருகுதென்று 
கரடேறி 
பார்த்ததென்ன ..
கான மயில் கண்டு 
சிந்தை 
முழுதும் 
அழிந்ததென்ன !!
=====================
மயில் 
வரும் 
பாதையில் ...
பருந்தாய் 
சில
நினைவுகள்..
வட்டமிட்டு 
தவிப்பதென்ன !!
==================
ஆட்டு மந்தை 
கூட்டத்திலே 
வேங்கை 
வந்து 
பாய்ந்ததுபோல் ..
வேல் வீச்சு 
விழியிரண்டும் ...
சிந்தைகளை 
சிதறடிப்பதென்ன !!
=====================
அழகாய் 
பூத்தொடுக்க 
அந்தி மல்லி 
பூவிருக்க ...
மந்தியென் 
மனம் பறித்து 
பூச்சூடி 
ஆவதென்ன !! 
===============
வாடாமல்லி 
ஒரு காசு ...
செண்டு மல்லி 
ஒரு காசு ...
வட்டமல்லி 
ஒரு காசு ...
செவந்தி பூவு 
ஒரு காசு ...
கணக்கு போட்டு 
பார்த்தாலும் 
உன் வாசம் 
போலில்லை 
மல்லிகையே !!
============
ஆத்து மீனு 
அரைக்காசு ...
அயிரை மீனு 
அரைக்காசு ...
கெண்டை மீனு 
அரைக்காசு ...
கெளுத்தி மீனும் 
அரைக்காசு ...
உன் 
விழி மீனு 
எத்தனை காசு ...
தவிக்குதடி 
என்னுசுரே !!
==========
நெல்லு 
விளையட்டும்
தஞ்சயிலே ...
சோளம் 
விளையட்டும்
கடலூரிலே ..
உன் 
மனதில் 
காதல் 
விளைந்தாலன்றி 
என் 
பஞ்சம் 
தீர்ந்திடுமோ 
பூங்குயிலே !!
===============
கிழவன்தானடி ..
வாலிப 
கவிஞனாகி 
விடுகிறேன் ...
உன்னோடு 
நடக்கையிலே !
================
விறகு 
கட்டைகளை கூட 
தலையில் 
அனாயாசமாக 
சுமந்து 
விடுகிறாய் 
நீ ...
பூப்போன்ற 
உன் 
நினைவுகளை 
சுமக்க 
முடியாமல் 
தடுமாறுகிறேன் 
நான் !
================

No comments:

Post a Comment