எருக்கிலைக்கு
தண்ணீர் கட்டி
எத்தனை பூ
பூத்தாலும் ...
மருக்கொழுந்து
வாசம் வருமோ
தென் பழனி
வேலவனே!
===============
உச்சியிலே
சடையிருக்க ...
உள்ளங்கையில்
வேலிருக்க ...
நெற்றியிலே
நீறிருக்க ...
என்
நினைவு தப்பி
போவதென்ன !!
================
காவடி
வருகுதென்று
கரடேறி
பார்த்ததென்ன ..
கான மயில் கண்டு
சிந்தை
முழுதும்
அழிந்ததென்ன !!
=====================
மயில்
வரும்
பாதையில் ...
பருந்தாய்
சில
நினைவுகள்..
வட்டமிட்டு
தவிப்பதென்ன !!
==================
ஆட்டு மந்தை
கூட்டத்திலே
வேங்கை
வந்து
பாய்ந்ததுபோல் ..
வேல் வீச்சு
விழியிரண்டும் ...
சிந்தைகளை
சிதறடிப்பதென்ன !!
=====================
அழகாய்
பூத்தொடுக்க
அந்தி மல்லி
பூவிருக்க ...
மந்தியென்
மனம் பறித்து
பூச்சூடி
ஆவதென்ன !!
===============
வாடாமல்லி
ஒரு காசு ...
செண்டு மல்லி
ஒரு காசு ...
வட்டமல்லி
ஒரு காசு ...
செவந்தி பூவு
ஒரு காசு ...
கணக்கு போட்டு
பார்த்தாலும்
உன் வாசம்
போலில்லை
மல்லிகையே !!
============
ஆத்து மீனு
அரைக்காசு ...
அயிரை மீனு
அரைக்காசு ...
கெண்டை மீனு
அரைக்காசு ...
கெளுத்தி மீனும்
அரைக்காசு ...
உன்
விழி மீனு
எத்தனை காசு ...
தவிக்குதடி
என்னுசுரே !!
==========
நெல்லு
விளையட்டும்
தஞ்சயிலே ...
சோளம்
விளையட்டும்
கடலூரிலே ..
உன்
மனதில்
காதல்
விளைந்தாலன்றி
என்
பஞ்சம்
தீர்ந்திடுமோ
பூங்குயிலே !!
===============
கிழவன்தானடி ..
வாலிப
கவிஞனாகி
விடுகிறேன் ...
உன்னோடு
நடக்கையிலே !
================
விறகு
கட்டைகளை கூட
தலையில்
அனாயாசமாக
சுமந்து
விடுகிறாய்
நீ ...
பூப்போன்ற
உன்
நினைவுகளை
சுமக்க
முடியாமல்
தடுமாறுகிறேன்
நான் !
================
No comments:
Post a Comment