Friday, August 2, 2024

வயநாடு

 


யார் 

செய்த 

பாவங்களை 

கழுவி 

தள்ளினாய் 

மழையே !!


============================


பாதகங்களை செய்தவர் 

பங்களாக்களில் 

படுத்துறங்க 

பாமரன் மேல் 

ஏனிந்த 

பகை !!


============================


வஞ்சத்தில் 

கோடிகள் 

சேர்த்தவருக்கு 

பாலூட்டுகிறாய் ...


பஞ்சத்தில் 

இருப்பவனுக்கு 

பாலூற்றுகிறாய்!!

======================

ஊழலில் 

திளைப்பவன் 

கோடிகளில் 

படுத்துறங்க 


ஏழையை

தெருக்கோடியிலும் 

உறங்க விட 

மறுக்கிறாய் !!


==========================


நீ 

கழுவி 

ஊற்றுவது 

மலைகளை 

அல்ல ...


உயிர்களை !!


No comments:

Post a Comment