யார்
செய்த
பாவங்களை
கழுவி
தள்ளினாய்
மழையே !!
============================
பாதகங்களை செய்தவர்
பங்களாக்களில்
படுத்துறங்க
பாமரன் மேல்
ஏனிந்த
பகை !!
============================
வஞ்சத்தில்
கோடிகள்
சேர்த்தவருக்கு
பாலூட்டுகிறாய் ...
பஞ்சத்தில்
இருப்பவனுக்கு
பாலூற்றுகிறாய்!!
======================
ஊழலில்
திளைப்பவன்
கோடிகளில்
படுத்துறங்க
ஏழையை
தெருக்கோடியிலும்
உறங்க விட
மறுக்கிறாய் !!
==========================
நீ
கழுவி
ஊற்றுவது
மலைகளை
அல்ல ...
உயிர்களை !!
No comments:
Post a Comment