Sunday, September 15, 2024

பனிக்கால

 பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்...
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்..
====================================
உன்னை 
பிரிந்தும் 
இன்னமும் 
உயிரோடு 
இருக்கிறேன் ...
உனது 
நினைவுகள் 
கருணை 
காட்டுவதால் !
=========================
திரும்பிக்கூட 
பார்க்காமல்தான் 
என்னை 
கடந்து 
போனாய் ...
அதனால் 
என்ன ...
என்னை 
தழுவிப்போனதே 
உனது 
வாசம் !!
===============================
நடக்கையில் 
சிக்கிக்கொண்ட 
உடையை 
நொடிப்பொழுதில் 
சரி செய்து 
கடந்து போனாய் ...
அந்த 
சிக்கலிலேயே 
இன்னமும் 
சிக்கிக் 
கொண்டிருக்கிறேன் 
நான் ...
=======================
காதலில் 
காத்திருப்பது 
சுகமாமே ....
எப்போது 
காத்திருக்க 
வைக்க 
போகிறாய் ....
======================

உதிர்ந்த 
சருகுகள் 
எல்லாம் 
தவம் 
செய்கின்றன ...
அடுத்த 
பிறவியில் 
உதிர்ந்தாலும் 
உன் 
புன்னகையாகத்தான் 
உதிர 
வேண்டுமாம் !!.
==============
பூக்களின் 
தலைநகரமாக 
அறிவித்து 
விட்டார்களா ...
உன் 
கூந்தலை !!
================
எனது
கவிதையை 
கேட்டு 
சிணுங்கவில்லையே ..
பர்சிலிருக்கும்
உனது 
புகைப்படம் !!

நீ
சிணுங்குகிறாயே!!

==============
உன்னை 
முதல் நாள் 
பார்த்தது 
போலவே 
இருக்கிறாய் ...
வளர்ந்திருப்பது 
எனது 
காதல்தான் !!
==============
நீ 
சிரித்த போதுதானே 
பற்றிக்கொண்டது 
அகல் 
விளக்கு !!
=====================
விட்டுவிடு 
என்கிறது 
வயது ...
இன்னமும் 
இறுக்கிக்கொள் 
என்கிறது 
காதல் ...
நான் 
என்னதான் 
செய்வது !!
x

No comments:

Post a Comment