உன்னை
நனைப்பதால்தானோ
உயரத்திலிருந்து
விழுந்தாலும்
மகிழ்வோடு
விழுகிறது...
மழை!!!!
=====================
நெஞ்சின்
மூலையில்
இருக்கும்
நினைவுகளை
ஞாபகப்படுத்தும்
இசை
போல ...
நெஞ்சின்
மூலையில்
இருக்கும்
நினைவுகளை
ஞாபகப்படுத்தும்
இசை
போல ...
வீட்டின்
மூலையில்
இருக்கும்
குடையை
அவ்வப்போது
ஞாபகப்படுத்திப்
மூலையில்
இருக்கும்
குடையை
அவ்வப்போது
ஞாபகப்படுத்திப்
போகிறது ..
மழை !!
=============================
கரைக்க
முயல்வதாய்
நினைத்து
உன்னழகை
அதிகப்படுத்தித்
தோற்றுப்
போனது ..
மழை !!
=============================
மழை
அல்ல ...
மழை
அல்ல ...
மழையில்
நனைந்த
நீதான்
பாதிக்கிறாய்...
என்
இயல்பு
வாழக்கையை !!
==========================
நீ
நடக்க
புல் தரை
வேண்டுமென்றுதானோ
பெய்கிறது ...
மழை !!
===========================
சேலை தலைப்பில்
நீ
தலை
துவட்டி விட்டபோது
தோன்றியது
தினமும்
வராதோ ..
மழை !!
============================
உன்
கன்னத்தில்
வழிவதற்காகவே
மேகங்கள்
தண்ணீரை
சேமிக்கிறதோ?
============================
உன்
தோள்களை
தொடாத
மழைத்துளிகளுக்கு
ஏது
மோட்சம் ?
============================
உன்
பாதச்சுவடுகளை
அழிக்க
முயன்று
அதிலேயே
சரணடைந்து
விட்டன
சில
மழைத்துளிகள் !
============================
உன்னை
நனைத்துவிட்டு
கலைந்து விடுகின்றன
மேகங்கள் ...
அதன்பிறகுதான்
என் மனதில்
சூழ்கின்றன
ஆசையின்
மேகங்கள் !
No comments:
Post a Comment