லட்டு போன்ற
கன்னங்கள்
என்று
கவிதை சொல்ல
ஆசைதான் ...
மாட்டு கொழுப்பென
கிண்டல்
செய்கிறேனென
நினைத்துகொள்வாயோ
என்றுதான்
பயமாக
இருக்கிறது !!
======================
எப்பொழுது
கொண்டு
வருவார்கள் ...
ஒரு வாழ்வு
ஒரு காதல்
என்னும்
சட்டம் !!
====================
இரண்டு
இதழ்கள்
இருந்தென்ன ...
ஒரு
நேரத்தில்
ஒரு
முத்தம்தானே
தருகிறாய் !!
====================
நீ
சாய்ந்து
கொள்கையில்
இலகுவாக
இருக்கும்
தோள்கள் ...
நீ
விலகியபின்னே
கனத்து
போகின்றன !!
+++++++++++++++++++++++
எழுதும்
போதெல்லாம்
உன்னை
சிந்திக்கிறேனா ...
இல்லை
உன்னை
சிந்திக்கும்
போதெல்லாம்
எழுதுகிறேனா ...
=============================
காற்றில்லா
தேசத்தில்
கூட
வாழ்ந்து
விடுவேன் ...
எப்படி
வாழ்வேன் ..
உன்
காதலில்லா
தேசத்தில் !!
============================
பார்வையை
விலக்கி
விடாதே ...
ஒளியிழந்து
விடப்போகிறது ..
என்
விழிகள் !!
=========================
கம்பனின்
வார்த்தைகளுக்கும்
மயங்காத
மனம் ....
மயங்கித்தான்
போயிற்று ...
உன்
மௌன
விழி பார்வையில் !!
======================
உன்
இதழிலிருந்து
இரண்டு
வரிகளை
கொடு ...
எழுதிக்கொள்கிறேன்
யாரும்
எழுதாத
கவிதையொன்றை !!
==========================
கரையில்
கிறுக்கியதை
அழித்துப்போகிறது
கடல் அலையொன்று ...
அழிக்க
முடியாதவற்றை
கிறுக்கிப்போகிறது
மனதில்
அலையொன்று !!
=========================
ஓசையின்றித்தான்
ஏதோ
சொல்லியது
உன்
விழிகள் ...
ஏன்
அதிர்கின்றது
என்
இதயம் !!
==========================
மழையோடு
நீ ...
நனைகின்றது
என்
காதல் !!
==========================
விழிகளால்
தினம்
உரமிட்டு
செல்கிறாய் ...
வளர்ந்து
கொண்டே
இருக்கிறது
எனது
காதல் !!
==========================
என்
இதயத்திற்கு
இறகு
கட்டிச்
செல்கிறாய் ...
உன்னை
சுற்றியே
வட்டமடிக்கிறது
அது !!
========================
இதய மாற்று
சிகிச்சை
செய்து கொள்ளலாமா ...
அப்போதாவது
புரியுமா
என்
காதல்
எத்தகையது
என்று !!
=========================
ஒரு
நாள்
நீ
பார்வையை
விலக்கி
சென்றாலும் ...
ஜோஸ்யக்காரனை
தேடுகிறேன் ...
பரிகாரம்
செய்ய !!
========================
No comments:
Post a Comment