Sunday, September 22, 2024

லட்டு


லட்டு போன்ற 
கன்னங்கள் 
என்று 
கவிதை சொல்ல 
ஆசைதான் ...

மாட்டு கொழுப்பென 
கிண்டல் 
செய்கிறேனென 
நினைத்துகொள்வாயோ 
என்றுதான் 
பயமாக 
இருக்கிறது !!

======================
எப்பொழுது 
கொண்டு 
வருவார்கள் ...

ஒரு வாழ்வு 
ஒரு காதல் 
என்னும் 
சட்டம் !!
====================
இரண்டு 
இதழ்கள் 
இருந்தென்ன ...

ஒரு 
நேரத்தில் 
ஒரு 
முத்தம்தானே 
தருகிறாய் !!

====================

நீ 
சாய்ந்து 
கொள்கையில் 
இலகுவாக 
இருக்கும் 
தோள்கள் ...

நீ 
விலகியபின்னே 
கனத்து 
போகின்றன !!

+++++++++++++++++++++++

எழுதும் 
போதெல்லாம் 
உன்னை 
சிந்திக்கிறேனா ...

இல்லை 
உன்னை 
சிந்திக்கும் 
போதெல்லாம் 
எழுதுகிறேனா ...

=============================

காற்றில்லா 
தேசத்தில் 
கூட 
வாழ்ந்து 
விடுவேன் ...

எப்படி 
வாழ்வேன் ..

உன் 
காதலில்லா 
தேசத்தில் !!

============================

பார்வையை 
விலக்கி 
விடாதே ...

ஒளியிழந்து 
விடப்போகிறது  ..

என் 
விழிகள் !!
=========================
கம்பனின் 
வார்த்தைகளுக்கும் 
மயங்காத 
மனம் ....

மயங்கித்தான் 
போயிற்று ...

உன் 
மௌன 
விழி பார்வையில் !!
======================

உன் 
இதழிலிருந்து 
இரண்டு 
வரிகளை 
கொடு ...

எழுதிக்கொள்கிறேன்
யாரும் 
எழுதாத 
கவிதையொன்றை  !!
==========================
கரையில் 
கிறுக்கியதை 
அழித்துப்போகிறது
கடல் அலையொன்று ...

அழிக்க 
முடியாதவற்றை 
கிறுக்கிப்போகிறது 
மனதில் 
அலையொன்று !!
=========================
ஓசையின்றித்தான் 
ஏதோ 
சொல்லியது 
உன் 
விழிகள் ...

ஏன் 
அதிர்கின்றது 
என் 
இதயம் !!
==========================

மழையோடு 
நீ ...

நனைகின்றது 
என் 
காதல் !!
==========================
விழிகளால் 
தினம்
உரமிட்டு 
செல்கிறாய் ...

வளர்ந்து 
கொண்டே 
இருக்கிறது 
எனது 
காதல் !!

==========================
என் 
இதயத்திற்கு 
இறகு 
கட்டிச் 
செல்கிறாய் ...

உன்னை 
சுற்றியே 
வட்டமடிக்கிறது 
அது !!

========================
இதய மாற்று 
சிகிச்சை 
செய்து கொள்ளலாமா ...

அப்போதாவது 
புரியுமா 
என் 
காதல் 
எத்தகையது 
என்று !!

=========================
ஒரு 
நாள் 
நீ 
பார்வையை 
விலக்கி 
சென்றாலும் ...
ஜோஸ்யக்காரனை 
தேடுகிறேன் ...

பரிகாரம் 
செய்ய !!
========================


No comments:

Post a Comment