Sunday, September 8, 2024

ரயிலேறி விட்டாய் ...

 என் 
இதயத்திலிருந்து 
காதலை 
எடுத்துக்கொண்டு 
உடல் முழுதும் 
முட்களாக்கிவிட்டு 
போகிறாய்  ...
ஆறுதல் தேடி
எதன் மீதும் 
சாய்ந்து 
கொள்ள முடியாமல் 
தவிக்கிறேன் 
நான் !!
===================================
எதை எதையோ 
எடுத்துக்கொண்டு 
நீ 
ரயிலேறி விட்டாய் ...
உன் 
நினைவு 
சுமைகளோடு 
நான் 
தவிக்கிறேன் !!
===================================
சேரவும் 
முடியாமல் 
பிரியவும் 
முடியாமல் 
பயணிப்பது 
இந்த 
தண்டவாளங்கள் 
மட்டுமல்ல ....
நீயும் 
நானும் 
கூடத்தான் !!
===================================
எனது 
ஒவ்வொரு 
கவிதையிலும் 
ஏதோ ஓன்று 
குறைகிறது ...
உனது 
பெயர்தான் !!
===================================
உனது 
குளிர் 
பார்வையிலேயே 
உருகிப்போனது 
எனது 
காதல் 
பனித்துளி !!

======================
காதலைப்பற்றி
பேசுபவர்களை 
மூட நம்பிக்கையை
விதைக்கிறார்கள் 
என்று 
காவல்துறை 
கைது 
செய்யாதா என்ன!!
≈=========================
இன்னமும் 
புரியவில்லை ...

நீ
எனது 
பாவமா...
புண்ணியமா!!!
===============================

No comments:

Post a Comment