உன்னை
காணும்போதெல்லாம்
என் விழிகளும்
இதயமும்
கூட்டணி அமைத்து விடுகின்றன ..
என்னை விட்டு
உன்னோடு !!
**************************
உன்
விரல் மையினால்
நாட்டின் தலையெழுத்து
மாறுகிறதோ இல்லையோ ..
உன்
விழி மையினால்
மாறி விட்டது
என்
தலையெழுத்து !!
**************************
ஓட்டு போடும்முன்
உணர்த்தி விட்டார்கள்
வாக்காளன் நிலையை ...
கறுப்பு மையினால்
விரலுக்கு
நாமம் போட்டு !!
**************************
சற்றே
உற்றுப்பார்...
உன்னை
கடந்து செல்ல
மனமின்றி
ஆற்று நீர் கூட
ஓடாமல்
நின்று விட்டது!!
******************************
மொழியை
திணிப்பதாக
புகார் சொல்கிறார்கள் !!
ஒவ்வொரு நொடியும்
பார்வையாலேயே
காதல் மொழியை
என் மீது
திணிக்கிறாயே ..
யாரிடம்
புகார் சொல்வது
நான் !!
******************************
உனது
அன்பின்
துளிகள்
போதாதோ
எனது
வாழ்க்கை சக்கரம்
சுழல்வதற்கு !!
******************************
விலை மதிப்பில்லா
உன்
ஒவ்வொரு துளி
அன்பிலும்
சுழல்கிறது
எனது
வாழ்க்கை சக்கரம் !!
******************************
அனாதையாகத்தான்
இருந்தேன்...
நீ
பிறக்கும்வரை!!
********************************
கட்டத்தில் இருக்கும்
ராணியே
கலங்கடிக்கிறது...
எப்படி
சமாளிப்பேன்....!?
எதிரிலிருக்கும்
ராணியை!?
**********************************
Like பட்டன் அழுத்தவில்லை....
Follow பட்டனும் அழுத்தவில்லை..
உன்னை
தொடர ஆரம்பித்து விட்டதே...
என் இதயம்!!
*******************************************
எந்த
மலையையும்
கடக்குமென்று
சொன்னானே ....!!?
உன்
வீட்டை
கடக்க முடியாமல்
திணறுகிறதே ...
இந்த
வண்டி..!!!
*******************************************
**********************************************
தவறாக
சொல்லி விட்டான்
புத்தன் ...
உன் மீது கொண்ட
ஆசையே
என்
இன்பத்துக்கு
காரணம்!!
**********************************************
கோபுரத்தை
ஏன்
அங்கே
கட்டியிருக்கிறார்கள் ...?
நீ
இங்கிருக்க...!!
************************************************
சக்தி....
என்று
இறுமாப்பு
கொள்ளாதே!!
தோற்றே போவாய் ...
என்
காதலின்
சக்தியிடம்!!
************************************************
அழகு 50 கிலோ!
மொத்தம் 50 கிலோ!!
************************************************
நிலவில்லா
அமாவாசையில்தான்
தீபாவளியாம்!!
நம்
வீட்டில்
தீபாவளி கிடையாதாம்...
நிலவாய் நீ
வீட்டிலிருப்பதால் !!
பஞ்சாங்கமே
சொல்கிறது!!
**********************************************
நகை
அழகாகி
விட்டது ...
உன்னை
அணிந்து
கொண்டதால்!!
**********************************************
திருஷ்டி
கழிக்கும் சாக்கில்
உன்னை
பார்த்து விடலாமென
பூசணிக்காயாய்
பிறக்கும்
வரம் கேட்டு
தவமிருக்கின்றன
சில ஆன்மாக்கள்
***********************************************
பெண்ணைத்தானே
காதலிக்க
விரும்பினேன் ...?
காதலே
பெண்ணாக
வந்தால்
என்ன செய்வேன்...?
***********************************************
அது சூரியன்தான்...
உனக்கு
வியர்க்கக்கூடாதென்று
சந்திரனைப்போல
வேடமணிந்து
வருகிறான்...
***********************************************
விக்ஸ் தயாரிப்பவன்
புத்திசாலிதான் ...
உபயோகிக்கும் முறை
என்று தலைப்பிட்டு...
சக்தியின் கைகளால்
போட்டுக் கொண்டால்
பலனளிக்கும்
என்று எழுதியிருக்கிறானே!!
***********************************************
கவிதைப் புத்தகத்தின்
அட்டையில்
உனது படத்தை
போட்டேன் ...
அட்டைப்பட கவிதையே
அபாரம் என்று
சொல்கிறார்கள் ...
*************************************************
பூக்களின்
தலைநகரம்
எதுவென்று
கேட்டிருக்கிறார்கள்...
எழுதிவிடவா..
பதிலை !!?
உன்
கூந்தலென்று!!
***************************************************
வரம் கேட்டு
தவமிருப்பவர்களிடம்
முதலிலேயே
சொல்லி விடுகிறேன்...
இரண்டு வரங்கள்
கொடுக்க முடியாதென்று...
சாகாவரம்...
உன்னை விட
அழகாகும் வரம்!!
*****************************************************
சர்வாதிகாரம்
நல்லதென
சொல்கிறதே..
உனது
காதல் அகராதியின்
பக்கங்கள்!!
*****************************************************
இரவு
ஏன்
இவ்வளவு
நீண்டதாக
இருக்கிறது?
தூங்கும் உன்னை
தாலாட்ட
மெதுவாக
சுற்றுகிறதோ
பூமி!!?
***************************************************
பள்ளிக்கூடங்களையெல்லாம்
மூடிவிடலாமா ..!!?
உனது
பார்வைதான்
எல்லோரையும்
கவிஞனாக்கி
விடுகிறதே !!
******************************************************************
நீ
நடந்து
வரும்போது
அழகாகி
விட்டது ...
இந்த
பூந்தோட்டம் !!
******************************************************************
அழகிற்கு
எதற்கு
ஒப்பனை ?
ஒருவேளை
அழகுசாதன
பொருட்களுக்கு
அழகூட்டுகிறாயோ !!
******************************************************************
நான்கு அல்ல ..
ஐந்தாவதாய்
ஒரு
யுகமும்
இருக்கிறது ...
நீ
மௌனமாய்
இருக்கும்
மணித்துளிகள்தான்
மவுன யுகம்
என்று
ஐந்தாவது யுகமாய் !!
******************************************************************
என்ன
பாவம்
செய்தன ...?
உன்
பெயரிலுள்ள
எழுத்துக்களை
தவிர
பிற
எழுத்துக்கள் !!?
******************************************************************
மேடை
ஏறிவிட்டு
கவிதை
சொல்லாமலே
"சிறந்த கவிதை"
என்று
பரிசு
வாங்கி விடுகிறாய்
நீ !
******************************************************************
இப்பிபஞ்சத்தையே
உனக்கு
பரிசாகத்தர
எண்ணியிருந்தேன்...
பிரபஞ்சமே
நீதான்
என்றறியாமல்!!!
******************************************************
இன்று
நீ மௌன விரதம்
இருப்பதை
உன்
விழிகளுக்கு
தெரிவிக்கவில்லையா..?
எதை எதையோ பேசி
பாடாய்
படுத்துகிறதே!!!
*******************************************************
அணு ஆயுதப்போர்
வந்துவிடுமோவென
அஞ்சுகிறார்கள்...
உன்
மௌனத்தை விட
கொடிய ஆயுதத்தை
யார்
கண்டு பிடிக்க
போகிறார்கள்..!!?
********************************************************
வருடங்களோ
யுகங்களோ
கடந்தாலும் ...
ஒவ்வொரு
நொடியும்
இந்த பிரபஞ்சம்
தன்னை
புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது ...
நமது
அன்பை போல !!
****************************************
No comments:
Post a Comment