வர்ணம் பூச
முயல்கிறது ...
உன்
வருகைக்கு
கருநிறம்
காட்டினால்
எதிர்ப்பாகி
விடுமாம்!!
************************************************
கவிஞனாகும்
வரம்
கேட்டான்
ஒருவன் ...
கொடுத்து
விட்டேன் ..
உன்னைப்போல்
ஒரு
காதலியை!!
*************************************************
இலக்கணம்
எழுதிக்கொண்டிருக்கிறேன்..
காதலுக்கு ...
என்ன
எழுதுவதென்று
தெரியவில்லை ...
உன்
பெயரைத்தவிர ...
************************************************
சூரியனுக்கு
உன் மீது
என்ன
கரிசனமோ!!
உனது
நிழலில் கூட
கருமை தவிர்த்து
வர்ணஜாலம்
காட்டுகிறானே!!
**************************************************
உன்
பார்வையே
ஆக்கவும்
அழிக்கவும்
செய்கிறதே !!
நான்
என்ன
செய்யப்போகிறேன்..?
இந்த
சூலத்தால்!!
***************************?***********************
என்
அசைவை
சக்தி தாண்டவம்
என்றல்லவா
சொல்ல வேண்டும் !
சக்தியின்றி
இங்கே
சிவம்
ஜடம்தானே !
***************************?***********************
வார்த்தை கட்டுகளாய்
நான் எழுதியதை
நீ
வாசிக்க ஆரம்பித்தாய் !!
கவிதை பிறந்தது !!
********************************************************
தொலைந்தவர்களை
மை போட்டு
பார்ப்பார்களாமே !!
நீ
கண்ணில்
மை போட்டதால்தானே
நான்
தொலைந்தே
போனேன் !!
********************************************************
உன்
விழி சொல்லும்
கவிதைகளுக்கு
விளக்க உரை எழுத
திணறி
தவிக்கிறது
இந்த AI
**************************(******************
உன்
பெயரை
உச்சரிக்கும்
ஒவ்வொரு
நொடியும்
இதயம்
புது மொழியை
கற்று கொள்கிறது !
********************************************************
உன்
கண்கள்தான்
நொடிக்கொரு
கவிதை எழுதுகிறதே !
ஓலைச்சுவடியில்
என்ன
எழுத போகிறாய் !?
***************************************************
என்
சூலாயுதத்தை விட
பலமாக
தாக்குகிறதே !!
அப்படி
என்னதான்
வைத்திருக்கிறாய்
கண்களில் !!
***************************************************
No comments:
Post a Comment