Saturday, January 24, 2026

சிவசக்தி

கார்மேகமும் 
வர்ணம் பூச
முயல்கிறது ...

உன் 
வருகைக்கு 
கருநிறம்
காட்டினால் 
எதிர்ப்பாகி
விடுமாம்!!
************************************************
கவிஞனாகும்
வரம்
கேட்டான்
ஒருவன் ...

கொடுத்து
விட்டேன் ..

உன்னைப்போல்
ஒரு
காதலியை!!
*************************************************
இலக்கணம்
எழுதிக்கொண்டிருக்கிறேன்..
காதலுக்கு ...

என்ன
எழுதுவதென்று
தெரியவில்லை ...

உன் 
பெயரைத்தவிர ...
************************************************
சூரியனுக்கு
உன் மீது
என்ன
கரிசனமோ!!
உனது
நிழலில் கூட
கருமை தவிர்த்து
வர்ணஜாலம்
காட்டுகிறானே!!
**************************************************
உன்
பார்வையே
ஆக்கவும்
அழிக்கவும்
செய்கிறதே !!

நான்
என்ன
செய்யப்போகிறேன்..?
இந்த
சூலத்தால்!!
***************************?***********************
என் 
அசைவை 
சக்தி தாண்டவம் 
என்றல்லவா 
சொல்ல வேண்டும் !

சக்தியின்றி 
இங்கே 
சிவம் 
ஜடம்தானே !
***************************?***********************
வார்த்தை கட்டுகளாய் 
நான் எழுதியதை 
நீ 
வாசிக்க ஆரம்பித்தாய் !!

கவிதை பிறந்தது !!
********************************************************
தொலைந்தவர்களை 
மை போட்டு 
பார்ப்பார்களாமே !!

நீ 
கண்ணில் 
மை போட்டதால்தானே 
நான் 
தொலைந்தே 
போனேன் !!
********************************************************
உன்
விழி சொல்லும்
கவிதைகளுக்கு
விளக்க உரை எழுத
திணறி
தவிக்கிறது
இந்த AI
**************************(******************
உன் 
பெயரை 
உச்சரிக்கும் 
ஒவ்வொரு 
நொடியும் 
இதயம்  
புது மொழியை 
கற்று கொள்கிறது !
********************************************************
உன் 
கண்கள்தான் 
நொடிக்கொரு 
கவிதை எழுதுகிறதே !

ஓலைச்சுவடியில் 
என்ன 
எழுத போகிறாய் !?
***************************************************
என் 
சூலாயுதத்தை விட 
பலமாக 
தாக்குகிறதே !!

அப்படி 
என்னதான் 
வைத்திருக்கிறாய் 
கண்களில் !!
***************************************************



No comments:

Post a Comment