Kavikkuyil
Friday, May 27, 2011
Thinam Thinam Maranam
உதிரும் பூக்களுக்கு
ஒரு நாள்தான் மரணம்
பிரியும் காதலுக்கு
தினம் தினம்
மரணம்
Wednesday, May 18, 2011
Kadhal Paruvam
பதினைந்து வயதில்
காதலித்தேன்
விடலை
பருவம் என்றார்கள்
இருபது வயதில்
காதலித்தேன்
இப்போதேவா
என்றார்கள்
இருபத்தைந்தில்
இன்னும் சம்பாதிக்க
வேண்டாமா என்றார்கள்
முப்பதில்
பெற்றோரிடம் பேசு
என்றார்கள்
முப்பதைந்தில்
வயதாகி விட்டது
என்றார்கள்
.......
இப்போதும்
உன்னை
காதலிக்கிறேன்
Unmai
கவிதைக்கு
பொய் அழகு !
அதற்காக
நீ
அழகில்லை
என்று
கவிதை எழுத
முடியுமா ?
Nee Yenge ?
உள்ளம் தொட்ட
காதல்
உயிர் தொட்ட போது
நீ
இல்லை
உயிர் உருகும் ஓசை
உள்ளத்தின் வழியே
கவிதையாய்
Neethan Azhagu
மலை அழகு
கடல் அழகு
நிலா அழகு
அந்தி மாலை அழகு
நீ
இல்லாத போது
Kadhal Kalam
காதல் காலம்
==========
கோடை காலத்தில்
வெப்பம்
குளிர் காலத்தில்
குளிர்
எனக்கு மட்டும்
குளிரும் வெப்பமும்
Keep Me in Heart
உன்
உள்ளத்தில்
என்னை
ஒளித்து வைத்துக்கொள்
நீ
பிறர் அறியாது
செய்த
பாவத்தை போல
Monday, May 16, 2011
Nee Vendum
அடுத்த நொடி ஓன்று எனக்கு உண்டென்றால்
அடுத்த பிறவி ஓன்று அமைந்தால்
......
இந்த பிதற்றல்கள் எதற்கு
.....
இந்த நொடி
நீ எனக்கு வேண்டும்
.......
அடுத்த நொடிக்கு நானே எஜமானன் ...!
Nee Ellamal ...
தூரிகை இல்லாமல்
ஓவியமா ?
எழுத்து இல்லாமல்
காவியமா ?
மலரின்றி
நல் வாசனையா ?
வீணை இன்றி
நாதமா ?
.........
அவள்
என்
அருகில் !!!
Kadhal Kaviyam
கம்பனை படித்தேன்
இளங்கோவடிகளை படித்தேன்
காளிதாசனை படித்தேன்
கண்ணதாசனை படித்தேன்
.......
உன்னிடம்
காதலை படித்தபோதுதான்
கவிஞனானேன்
Nee Mattum
வருடத்திற்கு
12 மாதங்கள்
மாதத்திற்கு
30 நாட்கள்
வாரத்திற்கு
7 நாட்கள்
ஒரு நாளுக்கு
24 மணி நேரம்
ஒரு மணிக்கு
60 நிமிடங்கள்
ஒரு நிமிடத்திற்கு
60 வினாடிகள்
ஆனால்
ஒரு வாழ் நாளுக்கு
நீ
மட்டுமே
Yentrum Unnodu
என்றாவது ஒரு நாள்
தனிமை படுத்த பட்டதாய்
நீ உணர்ந்தால்
உன்னை கவனித்து கொள்ள
யாரும் இல்லை
என்று
நீ உணர நேரிட்டால்
....
புரிந்துகொள்
நான்
இந்த உலகில்
இல்லையென்று
Unakku Mattum
அறிமுகமானவர்களிடம்
புன்னகை
நண்பர்களோடு
சிரிப்பு
வேண்டியவர்களிடம்
அழுகை
ஆனால்
சொந்தமானவர்களிடம் மட்டுமே
கோபம்
உன் மீது
எனக்கு
கோபம்
Avaloru Thendral
மரம்
செடி
கொடி
எதுவும் அசையவில்லை
ஆனால்
தென்றல் வீசியது
.
.
.
அவள்
நடந்து வந்தாள்
Edhu Eyarkai
கோழி கூவுகிறதென்று
சூரியன்
உதிப்பதில்லை
முல்லை மலர்கிறதென்று
வானில்
நிலா வலம் வருவதில்லை
நீ
படிக்க வேண்டும் என்று
நான்
கவிதை எழுதவில்லை
Yengum Nee ....
உந்தன் குரல்
என் காதில்
அவ்வப்போது ஒலிக்கிறது
உன் மேனி வாசம்
அவ்வப்போது
என்னை கிறங்க வைக்கிறது
உன் ஸ்பரிசம்
என்னை
சிலிர்க்க வைக்கிறது
உன் அழகு
என்னை பித்தனாக்குகிறது
விழித்த பின்புதான்
கனவென்று
புரிந்தது
Thedal ...
தொலைந்த நிமிடங்களில்
உன் அன்பை தேடினேன்
கலைந்த கனவுகளில்
உன் கால் சுவட்டை தேடினேன்
வற்றி போன இதயத்தில்
உன் நினைவுகளை கிளறி பார்த்தேன்
உதிர்ந்து போன நிஜத்தில்
உன் உருவத்தை பதிக்க முயன்றேன்
பிறகுதான் புரிந்தது
நின்று போன கண்ணீரில்
நீ இருக்கிறாய் என்று
Yedhu Kavidhai ?
கவிதை எழுத சொன்னார்கள்
உன் பெயரை எழுதினேன்
உன் பெயர் தவிர
எதுவும்
எனக்கு
கவிதையாய் தோன்றவில்லை
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)