தொலைந்த நிமிடங்களில்
உன் அன்பை தேடினேன்
உன் அன்பை தேடினேன்
கலைந்த கனவுகளில்
உன் கால் சுவட்டை தேடினேன்
உன் கால் சுவட்டை தேடினேன்
வற்றி போன இதயத்தில்
உன் நினைவுகளை கிளறி பார்த்தேன்
உன் நினைவுகளை கிளறி பார்த்தேன்
உதிர்ந்து போன நிஜத்தில்
உன் உருவத்தை பதிக்க முயன்றேன்
உன் உருவத்தை பதிக்க முயன்றேன்
பிறகுதான் புரிந்தது
நின்று போன கண்ணீரில்
நீ இருக்கிறாய் என்று
நீ இருக்கிறாய் என்று
No comments:
Post a Comment