Tuesday, March 1, 2022

கவிதையில் ஒருவன்

நம்பிக்கை இல்லைதான் ...
இருந்தும்
பார்க்கிறேன் கிளிஜோசியம் ...
என்னால் கிடைக்கிறதே
கிளிக்கு 
ஒரு நெல்மணி!

எந்த புள்ளியில் 
ஆரம்பித்தாய் கோலத்தை ...
தெரியவில்லை!!
எந்த புள்ளியில்
ஆரம்பித்தது எனது காதல் ...
தெரியவில்லை!!

வர்ணங்கள் போர்த்தி வரும் 
வசந்த காலங்கள் 
மௌனம் போர்த்தி வரும் 
மனதின் ஓசைகள் 

நிழல் போல 
யாத்திரையில் 
கூட வருவாயோ...
நிழல் தேடி 
வழியில் 
எனை பிரிவாயோ !

நானறியா 
பனித்துளி ஓன்று 
உள்ளம் தொட்டதோ !
நானறியா 
மலர்  ஓன்று 
மொட்டு விட்டதோ ! 

ஒற்றை புன்னகையில் 
உலகை விற்று 
வித்தை காட்டுகிறாய் 
சின்ன சின்ன 
பாதம் வைத்து 
பின்னல் நடை போடுகிறாய் !


 

No comments:

Post a Comment