பொக்கை வாய்ச்சிரிப்பில்
உலகையே பதுக்கி வைத்தாய்
மண்ணெண்ணெய் விளக்கொளியில்
வாழ்க்கை பாடம் சொன்னாய்
மளிகை கடைக்கும்
சமையலறைக்கும்
நெடுந்தூர பயணம் போனாய்
விறகால் அடுப்பெரித்து
விறகாய் எரிந்து போனாய்
குமிழியை திருகினால்
எரிகிறது அடுப்பு
மயானத்திலும்தான் !
No comments:
Post a Comment