கார்மேக
தோட்டத்தில்
பூத்த
கண்ணாடிப்பூ !
கார்மேக
கடலில்
விளைந்த
கண்ணாடி
முத்துக்கள் !
பூமா தேவிக்கு
அடிக்கடி
குடமுழுக்கு !
மேக
கிளை முறிந்து
பூமியில்
விழுந்த
நீர்க்கனிகள் !
வான் மகள்
சரியாக
துவட்டவில்லையோ
கார்மேக கூந்தலை ...
சொட்டுகிறதே !
எப்போது வருவாய் ...
எப்போது போவாய்
என்றே தெரியவில்லை
கைபேசி
காதல் போல !
பயிரின்
வித்தும்
தேடுகிறதே
மழையின்
முத்தை !
விதைத்தவனின்
பயிராய்
விளைவாயோ ...
அல்லது
கண்ணீராய்
விளைவாயோ !
வருணனே...
மிதமாகவே
வருவாய் ...
அப்போதுதானே
விதைத்தவனுக்கு
வருவாய் !
வருணனே ...
பூமாதேவிக்கு
மிதமாக தூவு
அர்ச்சனை அரிசியை ...
அதிகமானால்
எங்களுக்கு
வாய்க்கரிசியாகி
விடப்போகிறது !
No comments:
Post a Comment