சுட்டால்
இறக்கத்தானே
வேண்டும் ..!!
நீ மட்டும்
சுட்டபின்பு
எப்படி
பிறந்தாய் !
வறுமை மட்டுமல்ல
பணமும்
ஆடைகளில்
ஜன்னலை
போடும் !
சுடுகாட்டிற்கு
போனால்
குளித்துவிட்டுதான்
வீட்டிற்குள்
நுழையலாமாம் ....
சுடுகாடு தாண்டி
வரும் காற்றே ...
குளித்துவிட்டாயா !
என் அண்ணனும் அக்காவும்
தங்கையும் தம்பியும்
அம்மாவும் நானும்
பீடி சுற்றுகிறோம் ...
தந்தை
ஊர் சுற்றுவதால் !
கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம் ...
கோவில் இல்லா
ஊரைக்கூட
கண்டுபிடித்துவிடலாம்
டாஸ்மாக் இல்லா ஊரை
எங்கே தேடுவேன் !
No comments:
Post a Comment