உனது
வாழ்க்கை என்னும்
நாடகத்தில்
நான் ஒரு பாத்திரமா ?
இல்லை ...
எனது
வாழ்க்கை என்னும்
நாடகத்தில்
நீ ஒரு பாத்திரமா ?
================
என்னை
விழி மூடி
மயங்க வைத்து
விழித்திருந்தாய் ..
என்னை
விழி மூட '
மறக்க வைத்து
உறங்கி
போனாய் !
================
தோளில் சாய்த்து
அமைதி
தந்தாய் ...
அமைதியாகி
தோளில்
சுமக்க
வைத்தாய் !
===============
உன் மீது
மலர்களை
தூவவா ...
இல்லை
நினைவுகளை
தூவவா !
===============
நீ
எனக்கு
கிடைத்தது
அழகான விபத்து ...
நீ
என்னை
விட்டு போனது
ஆபத்தான விபத்து !!
================
விழிகளில்
தங்கிவிட்ட
உனது பிம்பத்தை
கண்ணீர்
கரைக்காதா !
===============
மண்'
மேலே இருந்த
புதையல் நீ ...
இதயத்தில்
புதைந்தாய் !!
==============
உதிராத
மலரில்லை ...
உதிராத
இலையில்லை ..
ஆனால் ...
நீ .....
மலரா!?
இலையா?
இல்லை ....
வேரா??
================
இலையுதிர் காலத்தை
தந்தவன் ...
நினைவுகள்
உதிரும் காலத்தை
தராமலா
போய் விடுவான் !
காத்திருக்கிறேன் ...
உனது
நினைவுதிர்காலத்தை
நோக்கி!!
===================
No comments:
Post a Comment