Saturday, November 19, 2022

இலையுதிர் காலம்

 உனது 

வாழ்க்கை என்னும் 

நாடகத்தில் 

நான் ஒரு பாத்திரமா ?

இல்லை ...

எனது  

வாழ்க்கை என்னும் 

நாடகத்தில் 

நீ  ஒரு பாத்திரமா ?

================

என்னை 

விழி மூடி 

மயங்க வைத்து 

விழித்திருந்தாய் ..


என்னை 

விழி மூட '

மறக்க வைத்து  

உறங்கி 

போனாய் !

================

தோளில் சாய்த்து 

அமைதி 

தந்தாய் ...


அமைதியாகி 

தோளில் 

சுமக்க 

வைத்தாய் !

===============

உன் மீது 

மலர்களை 

தூவவா ...


இல்லை 


நினைவுகளை 

தூவவா !

===============

நீ  

எனக்கு  

கிடைத்தது  

அழகான விபத்து  ...


நீ 

என்னை 

விட்டு போனது 

ஆபத்தான விபத்து !!

================

விழிகளில் 

தங்கிவிட்ட 

உனது பிம்பத்தை 

கண்ணீர் 

கரைக்காதா !

===============

மண்'

மேலே இருந்த 

புதையல் நீ ...


இதயத்தில் 

புதைந்தாய் !!

==============

உதிராத 

மலரில்லை ...

உதிராத

இலையில்லை ..

ஆனால் ...

நீ .....

மலரா!?

இலையா?

இல்லை ....

வேரா??

================

இலையுதிர் காலத்தை 

தந்தவன் ...

நினைவுகள் 

உதிரும் காலத்தை 

தராமலா 

போய் விடுவான் !

காத்திருக்கிறேன் ...

உனது

நினைவுதிர்காலத்தை

நோக்கி!!

===================

No comments:

Post a Comment