நீ இருக்கும்
திசையிலிருந்து
வீசுவதல்லவா
தென்றல் ..
அப்புறம் ஏன்
தெற்கிலிருந்து
வீசுவதை மட்டும்
தென்றல் என்கிறார்கள் !
தென்றல்
எவ்வளவு
இதமாக இருக்கிறது
என்கிறாய் ...
உன்னை தழுவி விட்டு
தென்றலும் அதையே
சொல்லி போகிறது !!
நீ நடந்த
பாதையில்
தினம் நடக்கிறேன் ...
கொஞ்சமாவது
மிச்சமிருக்காதா
நீ
சுவாசித்த தென்றல் !
No comments:
Post a Comment