Saturday, November 5, 2022

வியர்வை கவிதைகள்


எந்த 

கொல்லனிடம் 

கற்றாய் ....

என் 

நெஞ்சுருக்கும் 

கலையை !!


வியர்க்கிறதென  

மரத்தடியில் 

ஒதுங்கி விட்டாய் ...

வியர்க்கிறது பார் ..

பாவம்

மரத்திற்கு !!


நீ 

என்னை 

கடந்து சென்றவள் அல்ல 

கடத்தி சென்றவள் !


அகத்தியரை 

தேடிக்கொண்டிருக்கிறேன் 

உன்னை 

கவிதையில் வடிக்கும் 

தமிழை கற்க !!


காதலுக்கு 

சிறப்பு 

தாஜ்மஹாலா 

நீயா !!!


உனது 

சிணுங்கல்தான் 

தேசிய மொழியா 

காதலுக்கு !


உனது 

இதழ் தரும் 

அமுதமொன்று 

போதுமே ...

சாகா வரத்திற்கு !!

 

கூந்தலில்தானே 

சூடியிருக்கிறாய் 

பூக்களை ...

வண்டு ஏன் 

மொய்க்கிறது 

உனது 

முகத்தை !!


உனது 

பார்வை 

மலரும்போதெல்லாம் 

எனது பார்வை 

வண்ணத்து பூச்சியாகி 

விடுகிறது !


உன்னோடு

நிறைய

பேச முடிகிறது ...

நிறைவாகத்தான்

பேச முடியவில்லை !!


உனது

பொழுது பொக்கு

பார்வைக்கே 

பழுதாகி போனது

எனது வாழ்வு!


மண்ணுலகில்

கண்தானம்

செய்துவிட்டால் 

விண்ணுலகம் 

வரும்போது

உன்னை

எவ்வாறு காண்பேன் ...


எழுதுவதை 

நிறுத்திவிடுகிறேன்  ...

உனது நினைவுகள் 

எழுவதை 

நிறுத்தி விட்டால் !

No comments:

Post a Comment