Saturday, December 20, 2025
நிலா
Friday, December 19, 2025
கோலம்
🍁
கோலமாவால்
வெறும்
புள்ளிகளையும்
கோடுகளையும்
வைத்தே
கவிதை
எழுதி விட்டாய் !
எதை
எழுதுவது
என்று
திகைக்கிறது
எனது
தமிழும்
எழுத்தாணியும் !!
🍁
ஒரு ஓவியம்
புவியில்
கவிதை எழுதுவதை
வியந்து பார்க்கிறது
நிலா!.
🍁
இந்த வார
பட்டிமன்ற
தலைப்பு .....
எந்த
நாளில்
உனது
கோலம் அழகு !!?
தீர்ப்பு
காலவரையின்றி
ஒத்தி வைக்கப்பட்டது!!
🍁
நிலம்
ஏன் அதிர்கிறது?
நீ
பொட்டு வைப்பதால்
சிலிர்க்கிறதோ
பூமி?
🍁
எப்படி
சம்மதித்தது
கோலமாவு...?
உன்
விரல்களை விட்டு
இறங்குவதற்கு!!
🍁
கோலம்
எப்படி
என்கிறாய்!!
எந்த
கோலத்தை
ரசிப்பது
நான்?
Thursday, July 31, 2025
முத்தங்களை
மழலைக்களின்
கன்னத்து வயல்களில்
தாராளமாகாவே
முத்தங்களை
விதைக்கிறாய் ...
எனது
கன்னத்து
வயலில் மட்டும்
கருமியாகி விடுகிறாய் !!
========================
Wednesday, June 11, 2025
பட்டாம் பூச்சி
Saturday, April 26, 2025
இளையராஜா
இளையராஜாவை
படைத்தபின்புதான்
நான்
சிறந்த படைப்பாளி
என்று
எனக்கே
திமிர் வந்தது
-- ப்ரம்மா
=================
பூவுலகிற்க்கு
நல்லிசை வழங்க
தனது
வீணையை
இளையராஜா
என்ற
பெயரில்
அனுப்பியது
கலைவாணி
==================
தனது
குழந்தையை
பிறர் புகழும்போது
தாய்க்கு
ஒரு பெருமிதம் வருமே ...
ஒரு அற்புத
குழந்தையை
பெத்த தாயே
இப்படி என்றால் ...
இளையராஜாவுக்கு தான்
எத்தனை இசை குழந்தைகள் ..?
ஒவ்வொரு
பாடலையும்
நாங்கள் கொண்டாடி
தீர்க்கிறோம் ...
இளையராஜாவுக்கு
பெருமிதம்
வராதா என்ன ?
அதை
கர்வம் என்றால்
என்ன சொல்வது ?
Tuesday, April 1, 2025
சித்திரப்பூ சேலை
மீன் கடிக்கும்
மெல்லிதழை ...
நான் கடித்தால்
ஆகாதா !!
தேனின் ருசி
தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா !!
மஞ்சள் பூசும்
இடமெல்லாம்
என் மனம் பூசல்
ஆகாதா !
கொஞ்சம் என்னை
குங்குமமாய்
குழைத்தெடுத்தால்
வாறேனா !
படிக்கட்டில்
ஏறி வரும்
பாதத்தெழில்
பாரப்பதற்கு
படிக்கட்டின்
இடையிலோர்
பலகையாய்
மாறேனா !
முக்காலும்
துணி மறைத்து
உன் சொக்காயை
இடுகையிலே
சொக்காகி
மூலை
சுவராகி போவேனா !!
Wednesday, February 12, 2025
பிறவாமல்
ஒரு
வீட்டை
எரிக்கும்போது
தீயதாக
தோன்றும்
நெருப்பு ...
உணவு
சமைக்கும்போது
நல்லதாகி
விடுகிறது !!
=======================
மரணத்தை
தடுக்க
முடியாது ...
பிறந்தது
மரணித்தே
தீரும் !!
மரணத்தை
தடுக்க
ஒரே
வழிதான்
இருக்கிறது ...
பிறவாமல்
இருத்தல் !!
================
இன்பத்தை
பெருக்குவதற்கு
எளிய
வழி
துன்பத்தை
குறைத்து
கொள்வதே !!
=======================
அனுபவிப்பதால்
ஆசைகள்
பூர்த்தி
அடைவதில்லை ...
நெய் ஊற்றுவதால்
நெருப்பு
அணைவதில்லை !!
=======================
உடல்
போக முடியாத
எல்லைக்கு
உடலின்
உள்ளிருக்கும்
ஏதோ
போக
முயல்கிறது !!
அது
எதுவென்றுதான்
புரியவில்லை !!
=======================
கங்கை
நீர்
முழுவதும்
கடலை அடைந்தபின்
கங்கையை
எளிதாக
கடந்துவிடலாம்
என்று
காத்திருக்கிறேன் ...
யுகங்களாய்
காத்திருக்க
நேருமோ !!
=======================
சில நேரங்களில்
தூங்க வைக்கிறது ...
சில நேரங்களில்
தூக்கத்தை கெடுக்கிறது ...
எப்படி வகைப்படுத்துவது
உன் நினைவுகளை !!?
=======================
=======================
Saturday, February 1, 2025
தாய்
Friday, January 24, 2025
குடையாய்
கோவிலுக்குள்
என்னை
ஈர்த்தது ...
வாசலில்
கண்ட
உனது
காலணி !!
======================
எங்காவது
மறந்து
வைத்து
விட மாட்டோமா என்று
உன்
நினைவுகளை
தினம்
சுமந்து பார்க்கிறேன்
குடையாய் ...
======================
நிலவை
மறைத்தது
குடை !!
=====================
இமைகளை
எதற்கு
படைத்தானோ
இறைவன் !!
அடிக்கடி
சிமிட்டி
உன்னை
பார்க்கும்
நேரத்தை
குறைத்து
விடுகிறதே !!
=====================
மழையில்
நனைந்தாலும்
உனது கைப்பிடியில்
குளிர்
காய்ந்து விடுகிறது ...
குடை !!
=====================
தாலாட்டை
சொல்லித்தந்த
உனது
மௌனம்தான்
இன்று
ஒப்பாரியையும்
சொல்லித்தந்து
போகிறது !!
=====================
எனது
நாட்குறிப்பில்
மட்டுமல்ல ...
வினாடி குறிப்பிலும்
இல்லை ...
உன்னை
நினைக்காத
பொழுதுகள் !!
=====================
உன்னை
பார்க்கும்
போதெல்லாம்
கவிதை
படிப்பதாய்
சொல்கின்றன
எனது
கண்கள் !!
=====================
நான்
பேசினால்
காதல் ...
நீ
பேசினால்
கவிதை !!
=====================