Tuesday, August 31, 2021

தனிமை

கொஞ்சல், சிணுங்கல், ஊடல், கூடல் 
எல்லாம் முடிந்து
தனியே விட்டுப் போனாய் ....

அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை,
தீபம் எல்லாம் முடிந்து, கடவுளை
தனியே விட்டு போகும்
அர்ச்சகர் போல !!

===================================

ஒன்றிய காதலி 
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
ஆதார் ஐ காட்டு என்றாள்!

திராவிட காதலி
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
கறுப்பு ரோசா
வேண்டுமென்றாள்!!

=================================

ஜாலம் காட்டும் பாவை விரல்கள்
புவியின்மீது நடனம்
வர்ண ஜாலம் காட்டும்
அழகு கோலம் ஜனனம்


===============================

க்ரைம் சைபர் ஆக வேண்டும்

என விரும்பியது அந்த காலம்

சைபர் க்ரைம் உருவாகி 

மிரட்டுவது இந்த காலம்

=================================

கிராமிய

கொண்டையில முடிஞ்சு வச்ச தாழம்பூ !
காதல்ல ஏன் அள்ளி வச்ச வேப்பம்பூ !

ஏலக்கா தோட்டத்துல சாணியள்ளி வீசுற !
ஏங்கிப்போன காதலுக்கு கரியள்ளி பூசுற !

கொசுவ அடிச்சாகூட கொலன்னு சொல்லுவியே!
மனச அடிச்சுபுட்டு சொர்ணாக்காவா சிரிக்குறியே !

அடுப்பில்லாம எம்மனச அவிச்சுபுட்ட கடலை போல !
துடுப்பில்லாம எங்காதல் தவிக்குதடி கடல் மேல!

சத்தியமா எம்மனசு ஒருநாள் உனக்கு புரியும் !
நித்திய ஜோதியா என் காதல் என்றும்  எரியும் !

==================================

காதல்ங்கிறது 
விடியல் ஆட்சி மின்சாரம் மாதிரி 
எப்போ வரும்னும் தெரியாது !
எப்போ போகும்னும் தெரியாது !

=================================

ஒரு ரோசாப்பூ கூடவா 
வாங்கி வரவில்லையென்று
கோபிக்கிறாய் ....
பூந்தோட்டத்திற்கு யார்
பூ கொண்டு வருவார் !!?

============≈==================

Saturday, August 28, 2021

காதல் முள் தான் !

 என் வாழ்க்கை கடிகாரத்தை 

ஓட வைப்பது 

நொடி முள்ளோ 

நிமிட முள்ளோ 

மணி முள்ளோ அல்ல 

உனது 

காதல் முள் தான் !


கண்ணாடி போன்றவன் இறைவன்

நீ விருப்பு காட்டினால் அவனும்

வெறுப்பு காட்டினால் அதையும்



பாசத்தால் கட்டப்பட்ட ஆன்மா என்னும் பசு, கட்டிலிருந்து விடுபட்டு தன் தலைவனான பதியை அடைய முயலும் முயற்சியே வாழ்க்கை


24 மணிநேரமும்

வகுப்பறையிலேயே இருந்தும்

எதையும் கற்கவில்ல...

பெஞ்சும் ... டெஸ்கும் !!



உனது இதய தொகுதியில் 

போட்டியிடும் எனக்கு 

காதல் சின்னத்தில் வா(ழ்)க்கை 

அளித்து தேர்ந்தெடுக்க 

வேண்டுகிறேன் 



காதல்

மீசையை முறுக்கி பாரதி 

Wednesday, August 25, 2021

தாமரை

சேற்றில் உதித்தாலும் 
செந்தாமரையாவதே கர்மம் 

கர்மத்தில் தர்மத்தை கொண்டால் 
மோடாசம் என்பதே மர்மம்


Sunday, August 22, 2021

தனிமை

இளமையில் உன்னோடு 
தனிமையில் கொஞ்சிய 
இனிமை நினைவுகளெல்லாம் 
தனிமையில் தவிக்கையில் 
வெறுமையில் வாட்டுதடி 

மஞ்சத்தில் துஞ்சிடினும் 
நெஞ்சத்தில் விழித்திருக்கும் 
வஞ்சி உன் நினைவோடு 
நீறாய் போவேனோ... இல்லை 
உன் நினைவோடு மீண்டும் 
பிறப்பேனோ!!

Friday, August 20, 2021

திண்ணையையும் காணவில்ல.!

 அசைபோட பல்லில்ல,

ஆனாலும் அசைக்காத நாளில்ல.! வெத்தல வாசமும் வெள்ளந்தி நேசமும் பொதைஞ்சுதான் கெடக்குது பொக்கை வாயிக்குள்ள.! சொல்கேட்க ஆளில்ல, ஆனாலும் சொல்லாத நாளில்ல! அரைச்ச பொடிக் கணக்கா நரைச்ச முடிக் கணக்கா அம்புட்டு கெடக்குது அனுபவம் அதுக்குள்ள.! உடுக்கை போல கை நடுங்கும் கொட்டப் பாக்கு எடுக்கயில; உரலுங்கூட இசை முழுங்கும் உலக்கை புடிச்சு இடிக்கயில.! சிறுவாடா சில்லறைய முடிஞ்சுக்குவா சீலையில; முட்டாயி வாங்கிக்கன்னு கொடுத்துடுவா கேட்கயில.! சிசிடீவி சின்ன டீவி இவ இருந்தா தேவையில்ல; இவ சொல்லும் கதை முன்னே அவதாரும் மிகையில்ல.! ஆடாத தலையக்கூட ஆட்டியாட்டி பேசுறதும், காதோரம் வளையத்த காட்டிக் காட்டி பேசுறதும் அழகுன்னு சொன்னாங்க அசலூருக்காரங்க.! அடியே.. தொண்ணூறத் தொட்டவளே, தொங்குஞ் செவி கொண்டவளே.. தானாவே தலையாடும் நீ பேசத் தண்டட்டி தூளியாடும்.! நினைச்சுப்பாத்தா பேரழகி நீதானடி திண்ணைக் கிழவி.! உன்னயத்தான் பல நாளா தேடுகிறேன் காணவில்ல, உன்னையிழந்த துக்கமோ என்னவோ இன்னைக்குப் பல வீட்டில் திண்ணையையும் காணவில்ல.!

Friday, August 13, 2021

கல்லறையில்

 உன் நினைவுகளை 

குப்பையில் போட்டேன் ...

அவை 

மக்காத குப்பைகளாகி 

என் இதய நிலத்தை 

நீர் வற்றி 

போக செய்து விட்டன !!


என் நம்பிக்கைகள் 

இன்னமும் 

உயிரோடுதான் இருக்கின்றன ...

கல்லறையில் !!


எதற்கோ 

நீ எழுதிய முன்னுரை 

என் காதலுக்கு 

முடிவுரை ஆகி விட்டது !!

Thursday, August 12, 2021

கண்ணீர்

கால காலமாய் 
காதலை இழந்தவர்கள் 
கடற்கரையில் விட்ட 
கண்ணீரால் 
உப்பானதோ கடல் நீர் 

Wednesday, August 11, 2021

ஆரிக்கிளில்

 ஆரிக்கிளில் வந்து சேரும் உன் நினைவு 

அப்படியே வெளியேறுது வென்ட்ரிக்கிளில் 


உன் மூச்சு காற்றை மட்டும் 

கடத்துவேனென்று 

அடிக்கடி அடம் புடிக்குது ட்ரேக்கியா 


எந்த பிம்பம் கண்டாலென்ன  

ஆப்டிக் நெர்வ் காண்பது 

என்றென்றும் உன் சிக்னலே 


கேட்டவர்கள் சொன்னார் நீ இதயத்திலென்று 

எனக்கன்றோ தெரியும் உன் வாசம் 

மோட்டார் கார்ட்டெக்ஸிலென்று 


===========================


தேர பூச்சி போல மனசுல ஒட்டிகிட்ட 

ஏர புடிச்சு மச்சான் மனச உழுது புட்ட

கிச்சடி செம்பா நெல்ல போல வெளஞ்சு புட்ட  

மச்சான் வாலிபத்த தினம் உசுப்பி விட்ட   !


சத்தம் போடுதடி தென்மேற்கு சாரல் மழ 

சித்தம் ஏங்குதடி சேலையில் நீ கொட புடிக்க 

ரத்தம் ஓடிடும்  நரம்புகளெல்லாம் 

நித்தம் தேடுதடி காதல் பாடம் படிக்க  !


வேலியோரம் இருவாட்சி பூத்து நிக்குதடி 

ஓங்காதோரம் கத சொல்ல காத்து நிக்குதடி 

தோளோரம் சாஞ்சுக்க நீயிருந்தா 

நெஞ்சோரம் மோகமும் பாத்தி கட்டுமடி !

Sunday, August 8, 2021

விவசாயி

Saturday, August 7, 2021

காதல் விவசாயி

 


ஆசை விதையை 

விதைத்து விட்டேன் ...

அன்பு மழையை 

எப்போது பொழிவாய் !!

---- காதல் விவசாயி 


பலருக்கு 

இதயம் 

உடலின் ஒரு 

பாகம் ...

எனக்கு அது 

பாக்கியம்  ...

நீ இருப்பதால் !!



பூமி 

தன்னை அலங்கரித்து கொள்கிறது ..

நீ போடும் 

கோலத்தால் !!


உன்மீது கொண்ட 

மோகங்கள் தீர 

யாகங்கள் செய்ய வேண்டுமா !

இல்லை 

யுகங்கள் தோறும் 

பிறக்க வேண்டுமா !!


நான் தொலைத்த 

கவிதை நீ ....

நீ தொலைத்த 

காதல் நான் !!



மனப்பூர்வமான எச்சரிக்கை ...

காதலிப்பது 

இதய நலத்திற்கு தீங்கானது !!


உன்னை பார்ப்பதில் 

என் கண்களை விட 

ஆர்வம் அதிகம் 

கண்ணீர் துளிகளுக்கு ...

உன்னை பார்க்கும் போதெல்லாம் 

வந்து விடுகிறது !!


இன்னமும் தெரியவில்லை 

எந்த ரயில் 

உன்னை என்னிடம் சேர்க்கும் ...

இல்லை ...

எந்த ரயில் 

என்னை உன்னிடம் சேர்க்கும் !!


பூக்கும் பூக்களெல்லாம் 

இறைவனடி சேர்வதில்லை ...

சில பூக்கள் 

புண்ணியமும் செய்திருக்கின்றன 

உன் கூந்தல் சேர்வதால் !!


பேசவே தெரியாதே 

என் பேனாவுக்கு ...

கவிதை பாட 

எப்படி கற்று'கொடுத்தாய் !!


நிழல் அழகு ... வெயில் இருப்பதால் !

குளிர் அழகு ... வெப்பம் இருப்பதால் !

உணவு அழகு ... பசி இருப்பதால் !

இறைவா நீ அழகு ....

சாத்தான் இருப்பதால் !!








தர்ப்பண சோறு!!

பித்ருக்களுக்கும் கட்டுப்பாடு 

வற்றல்  வடாம் 

எடுக்க அனுமதி இல்லை ..

ஆடி அமாவாசையன்று மட்டும் 

தர்ப்பண சோறு!!


கல்லை எடுத்து போட்டு 

தண்ணீர் குடித்து 

புத்திசாலி என காட்ட 

நான் தயார்தான் 

தண்ணீர் எங்கே முட்டாள்களே !!


கல்லை போட்டால் 

தண்ணீர் வராதா ...

கரன்சிக்கு எங்கே 

போவேன் !!


செடி முழுக்க முட்கள் 

ஓரத்தில் ஒரே ஒரு பூ 

மைனாரிட்டிக்குத்தான் மரியாதை 

பெயர் ரோஜா செடியாம் !!!


Thursday, August 5, 2021

துண்டு சீட்டு

 ஏண்டா ...

துண்டு சீட்டுல 

எதையாவது கிறுக்கி படிச்சா 

கவிஞர் ஆக்குவோம்னு நெனச்சியா ....


துண்டு சீட்டு படிக்கிறவங்கள  

முதல்வர் ஆக்கினாலும் ஆக்குவோம் 

கவிஞர் ஆக்கமாட்டோம் ...

ஓடிப்போய்டு !!!


 ===================================

தாஜ்மகால் காதல் பரிசாக கேட்டாள் 

கல்லறையை எப்படி 

காதல் பரிசாக தருவேன்??


==================================


காதலுக்கு 

சாதியில்லை 

மதமில்லை.....

காதலித்து 

பிறக்கும் 

குழந்தைக்கு 

உண்டு 

=================================

நம்புங்கள்...

வயது ஏற ஏற 

எனக்கு அறிவு முதிர்ச்சி 

வந்திருக்கிறது....

குழந்தை பருவத்தில் 

பலூனுக்கே குதூகலித்த மனது 

இப்போதெல்லாம் 

ரூபாய் நோட்டுக்குதான் 

குதூகலிக்கிறது

===================================

பாற்கடலை 

பருக நினைத்த பூனை போல 


==================================

Wednesday, August 4, 2021

பிரிவு

நாம் 
இந்த தண்டவாளங்களை போல 
என்றாய்  ..

தண்டவாளங்கள்
அருகருகே சென்றாலும்
சேர்வதே இல்லையே!!

==================================

உனக்கென்ன 
பாம்பணையே பஞ்சணையாக்கி
துஞ்சி விட்டாய் ...

பஞ்சணையிலும்
அவள் நினைவுகள்

≈=================≈========÷÷÷==