ஏண்டா ...
துண்டு சீட்டுல
எதையாவது கிறுக்கி படிச்சா
கவிஞர் ஆக்குவோம்னு நெனச்சியா ....
துண்டு சீட்டு படிக்கிறவங்கள
முதல்வர் ஆக்கினாலும் ஆக்குவோம்
கவிஞர் ஆக்கமாட்டோம் ...
ஓடிப்போய்டு !!!
===================================
தாஜ்மகால் காதல் பரிசாக கேட்டாள்
கல்லறையை எப்படி
காதல் பரிசாக தருவேன்??
==================================
காதலுக்கு
சாதியில்லை
மதமில்லை.....
காதலித்து
பிறக்கும்
குழந்தைக்கு
உண்டு
=================================
நம்புங்கள்...
வயது ஏற ஏற
எனக்கு அறிவு முதிர்ச்சி
வந்திருக்கிறது....
குழந்தை பருவத்தில்
பலூனுக்கே குதூகலித்த மனது
இப்போதெல்லாம்
ரூபாய் நோட்டுக்குதான்
குதூகலிக்கிறது
===================================
பாற்கடலை
பருக நினைத்த பூனை போல
==================================
No comments:
Post a Comment