கொண்டையில முடிஞ்சு வச்ச தாழம்பூ !
காதல்ல ஏன் அள்ளி வச்ச வேப்பம்பூ !
ஏலக்கா தோட்டத்துல சாணியள்ளி வீசுற !
ஏங்கிப்போன காதலுக்கு கரியள்ளி பூசுற !
கொசுவ அடிச்சாகூட கொலன்னு சொல்லுவியே!
மனச அடிச்சுபுட்டு சொர்ணாக்காவா சிரிக்குறியே !
அடுப்பில்லாம எம்மனச அவிச்சுபுட்ட கடலை போல !
துடுப்பில்லாம எங்காதல் தவிக்குதடி கடல் மேல!
சத்தியமா எம்மனசு ஒருநாள் உனக்கு புரியும் !
நித்திய ஜோதியா என் காதல் என்றும் எரியும் !
==================================
காதல்ங்கிறது
விடியல் ஆட்சி மின்சாரம் மாதிரி
எப்போ வரும்னும் தெரியாது !
எப்போ போகும்னும் தெரியாது !
=================================
ஒரு ரோசாப்பூ கூடவா
வாங்கி வரவில்லையென்று
கோபிக்கிறாய் ....
பூந்தோட்டத்திற்கு யார்
பூ கொண்டு வருவார் !!?
============≈==================
No comments:
Post a Comment