Saturday, August 7, 2021

காதல் விவசாயி

 


ஆசை விதையை 

விதைத்து விட்டேன் ...

அன்பு மழையை 

எப்போது பொழிவாய் !!

---- காதல் விவசாயி 


பலருக்கு 

இதயம் 

உடலின் ஒரு 

பாகம் ...

எனக்கு அது 

பாக்கியம்  ...

நீ இருப்பதால் !!



பூமி 

தன்னை அலங்கரித்து கொள்கிறது ..

நீ போடும் 

கோலத்தால் !!


உன்மீது கொண்ட 

மோகங்கள் தீர 

யாகங்கள் செய்ய வேண்டுமா !

இல்லை 

யுகங்கள் தோறும் 

பிறக்க வேண்டுமா !!


நான் தொலைத்த 

கவிதை நீ ....

நீ தொலைத்த 

காதல் நான் !!



மனப்பூர்வமான எச்சரிக்கை ...

காதலிப்பது 

இதய நலத்திற்கு தீங்கானது !!


உன்னை பார்ப்பதில் 

என் கண்களை விட 

ஆர்வம் அதிகம் 

கண்ணீர் துளிகளுக்கு ...

உன்னை பார்க்கும் போதெல்லாம் 

வந்து விடுகிறது !!


இன்னமும் தெரியவில்லை 

எந்த ரயில் 

உன்னை என்னிடம் சேர்க்கும் ...

இல்லை ...

எந்த ரயில் 

என்னை உன்னிடம் சேர்க்கும் !!


பூக்கும் பூக்களெல்லாம் 

இறைவனடி சேர்வதில்லை ...

சில பூக்கள் 

புண்ணியமும் செய்திருக்கின்றன 

உன் கூந்தல் சேர்வதால் !!


பேசவே தெரியாதே 

என் பேனாவுக்கு ...

கவிதை பாட 

எப்படி கற்று'கொடுத்தாய் !!


நிழல் அழகு ... வெயில் இருப்பதால் !

குளிர் அழகு ... வெப்பம் இருப்பதால் !

உணவு அழகு ... பசி இருப்பதால் !

இறைவா நீ அழகு ....

சாத்தான் இருப்பதால் !!








No comments:

Post a Comment