தட்பவெப்பம்
மாறிய பிறகுதானே
மின்னல் தாக்கும் ...
மின்னல்
தாக்கிய பின்பு
மாறியது
எனது தட்பவெப்பம் !
கண் சிமிட்டாமல்
எவ்வளவு நேரம்
இருக்க முடியுமோ
அவ்வளவு நேரம்
என்னால் இருக்க முடியும்
உண்னை நினைக்காமல் !
கை முழுவதும்
மிட்டாயை வைத்துக்கொண்டு
இன்னும் கொடு என்று
கெஞ்சும் குழந்தை போல
இதயம் முழுக்க
அவள் தந்த
காதலை வைத்துக்கொண்டு
இன்னம் கொடு என அவளிடம்
கெஞ்சுகிறேன் நான் !
எப்பொழுது
நிறுத்துவாய் ...
ஒவ்வொரு நொடியிலும்
நீ நடத்தும்
இதய பிரவேசத்தை !
நீ
வந்தபோதுதான்
காதல் வந்தது ...
நீ
போன போது
காதல்
போகவில்லையே ...
இது என்ன நியாயம் !
No comments:
Post a Comment