Wednesday, May 4, 2022

காயங்கள்

 நான் 

கர்வமற்றவன் 

என்று 

சொல்லிக்கொள்வதுகூட 

ஒரு 

கர்வம்தானோ !


கண்ணீரால் 

காயங்கள் ஆறுமென்றால் 

என் கண்ணீரால் 

இந்நேரம் 

ஆறியிருக்க வேண்டுமே 

இப்பிரபஞ்சத்தின் 

காயங்களெல்லாம் !


என் 

இதயத்தை 

ஏன் எடுத்து சென்றாய் 

என்று இப்போதுதான் 

புரிகிறது ....

நீதான் 

இதயமே 

இல்லாதவள் ஆயிற்றே !


இரவு முழுதும் 

விழித்திருக்கிறேன்

அதிகாலையில் உறங்க ...

அதிகாலையில் 

காணும் கனவு 

பலிக்குமாமே !


தலையணை மாறியதால் 

தூக்கம் வரவில்லையோ என

ஏமாந்திருந்தேன் 

இதயம் மாறியது 

அறியாமல் !


எடைக்கு போட்டிருந்தால் 

கடலையாவது 

கிடைத்திருக்கும் ...

கவிதை புத்தகங்கள் !


ஒரே புன்னகையைத்தான் 

தினம் தினம் வீசுகிறாய் ...

எனில் 

புதிது புதிதாய் 

ஜனிக்கிறது கவிதைகள் !


உனக்கும் 

எனக்கும் இடையில் 

எதையாவது 

வைப்பதாக இருந்தால் 

வைத்துவிடு 

நம் காதலை !


நீ அழகென்று 

ஊருக்கே தெரியும் 

எவ்வளவு அழகென்று 

என் 

கண்களுக்கு மட்டுமே 

தெரியும் !


விருப்போடு நினைத்தாலும் 

வெறுப்போடு நினைத்தாலும் 

இனிக்கவே செய்கிறது 

அவள் நினைவு ....

விரும்பி சுவைத்தாலும் 

வெறுப்போடு சுவைத்தாலும் 

இனிக்கும் கரும்பு போல !


வண்ணத்துப்பூச்சியே 

பூக்களும்  

நீயும் பேசிய 

ரகசியங்களை 

கொஞ்சம் சொல்லேன் ...

கவிதை எழுத வேண்டும் 


இதயப்பலகையில் 

பேரெழுதி 

காதல் பாடம் நடத்தி ...

சொல்லாமல் போனாள் 

தேர்வு வைக்காமலே !


புகைப்படம் 

ஒன்றை அனுப்பி 

இதற்கு 

கவிதை எழுது என்றாள் ...

கவிதைக்கு எப்படி 

கவிதை எழுதுவது !


துண்டு காகிதம் 

கிடைக்கும் போதெல்லாம் 

கவிதை கப்பல் 

செய்து பார்க்கிறேன் ..

காதல் மழையே 

எப்போது வருவாய் !


அவளுக்கு தெரியாதா 

காலம் கடந்தவனிடம்

ஆல காலம்  தோற்குமென்று  

இருந்தும் 

தடுக்கச் சொல்லியது

அவளது காதல் !!


இதயத்திற்கு அடங்காத காதலும் 

கண்ணுக்கு அடங்காத உறக்கமும் 

கம்பளிக்கு அடங்காத குளிரும் 

காத்திருக்கின்றன 

உனக்காக !


எங்கிருந்து வந்தது 

இந்த 

நகரும் சிலை !


No comments:

Post a Comment