நான்
கர்வமற்றவன்
என்று
சொல்லிக்கொள்வதுகூட
ஒரு
கர்வம்தானோ !
கண்ணீரால்
காயங்கள் ஆறுமென்றால்
என் கண்ணீரால்
இந்நேரம்
ஆறியிருக்க வேண்டுமே
இப்பிரபஞ்சத்தின்
காயங்களெல்லாம் !
என்
இதயத்தை
ஏன் எடுத்து சென்றாய்
என்று இப்போதுதான்
புரிகிறது ....
நீதான்
இதயமே
இல்லாதவள் ஆயிற்றே !
இரவு முழுதும்
விழித்திருக்கிறேன்
அதிகாலையில் உறங்க ...
அதிகாலையில்
காணும் கனவு
பலிக்குமாமே !
தலையணை மாறியதால்
தூக்கம் வரவில்லையோ என
ஏமாந்திருந்தேன்
இதயம் மாறியது
அறியாமல் !
எடைக்கு போட்டிருந்தால்
கடலையாவது
கிடைத்திருக்கும் ...
கவிதை புத்தகங்கள் !
ஒரே புன்னகையைத்தான்
தினம் தினம் வீசுகிறாய் ...
எனில்
புதிது புதிதாய்
ஜனிக்கிறது கவிதைகள் !
உனக்கும்
எனக்கும் இடையில்
எதையாவது
வைப்பதாக இருந்தால்
வைத்துவிடு
நம் காதலை !
நீ அழகென்று
ஊருக்கே தெரியும்
எவ்வளவு அழகென்று
என்
கண்களுக்கு மட்டுமே
தெரியும் !
விருப்போடு நினைத்தாலும்
வெறுப்போடு நினைத்தாலும்
இனிக்கவே செய்கிறது
அவள் நினைவு ....
விரும்பி சுவைத்தாலும்
வெறுப்போடு சுவைத்தாலும்
இனிக்கும் கரும்பு போல !
வண்ணத்துப்பூச்சியே
பூக்களும்
நீயும் பேசிய
ரகசியங்களை
கொஞ்சம் சொல்லேன் ...
கவிதை எழுத வேண்டும்
இதயப்பலகையில்
பேரெழுதி
காதல் பாடம் நடத்தி ...
சொல்லாமல் போனாள்
தேர்வு வைக்காமலே !
புகைப்படம்
ஒன்றை அனுப்பி
இதற்கு
கவிதை எழுது என்றாள் ...
கவிதைக்கு எப்படி
கவிதை எழுதுவது !
துண்டு காகிதம்
கிடைக்கும் போதெல்லாம்
கவிதை கப்பல்
செய்து பார்க்கிறேன் ..
காதல் மழையே
எப்போது வருவாய் !
அவளுக்கு தெரியாதா
காலம் கடந்தவனிடம்
ஆல காலம் தோற்குமென்று
இருந்தும்
தடுக்கச் சொல்லியது
அவளது காதல் !!
இதயத்திற்கு அடங்காத காதலும்
கண்ணுக்கு அடங்காத உறக்கமும்
கம்பளிக்கு அடங்காத குளிரும்
காத்திருக்கின்றன
உனக்காக !
எங்கிருந்து வந்தது
இந்த
நகரும் சிலை !
No comments:
Post a Comment