Monday, May 23, 2022

பூக்களின்


நிழலே 

நீ ஏன் என்னுடனே 

வருகிறாய் -- நான் 

நானாவது வருகிறேனே -- நிழல் 


என் வழியாகத்தான் 

எல்லோரும் 

உலகை  பார்க்கிறார்கள் ...

இருந்தும் 

நான் கர்வம் 

கொள்வதில்லை -- ஜன்னல் 


பூவும் 

அவளிடம் 

கேட்கும் 

ஆட்டோகிராப் 


எத்தனையோ முறை 

நாம் 

காலடிகளால் 

அளந்த இந்த பாதை 

இப்போது 

அளக்கிறது 

எனது கண்ணீரை !


வாடா மலரான 

உனக்கு 

என்ன அழகினை 

தந்து விட போகிறது 

நீ 

கூந்தல் சூடும் 

வாடும் மல்லிகை !



நினைவுகளை மட்டும் 

இறக்கி விட்டு போகிறது 

தினம் 

நீ வந்திறங்கும் பேருந்து !


சீக்கிரம் 

காதலித்துவிடு ....

தாமதித்தால் 

என்னை காதலிக்காத 

நாட்களுக்காக 

வருத்தப்படுவாய் !


நீ 

எனது 

முதல் அழுகையா ...

கடைசி 

புன்னகையா !


காளிதாசனுக்கும் 

கம்பனுக்கும் 

இளங்கோவடிகளுக்கும் 

கிடைக்காத 

வரிகளை 

வரைந்து வைத்திருக்கிறது 

உனது உதடுகள் !


மணிக்கணக்கில் 

காத்திருந்து 

ஏழுமலையானை தரிசித்தேன் 

தெய்வத்தோடு !


நம்மூர் 

அரசியல்வாதிகளே பரவாயில்லை 

உனது 

காதல் வாக்குறுதிகளின் 

நிலையை நினைக்கும்போது !


உச்சி வெயில் காட்டிலே 

ஒன்னெனப்போ நெஞ்சு கூட்டிலே 


கள்ளம் கபடம் இல்லாதவள் 

என்று 

உன்னை நினைக்க முடியவில்லை 

என்னை 

களவாடியவள் ஆயிற்றே !


தோட்டத்து பூக்களும் 

செல்பி எடுக்க துடிக்கும் 

பூ 



கற்களால் கட்டப்பட்டது 

என்றார்கள் ...

காதலால் கட்டப்பட்டது

என்றேன் நான் !


கவிதைக்கு 

பொய் அழகுதான் ...

உன்னை 

வர்ணிக்கும் வரிகள் தவிர !


அழுகை கூட 

கவிதைதான் ...

பிறந்த குழந்தையின் 

முதல் அழுகை !



No comments:

Post a Comment