நிழலே
நீ ஏன் என்னுடனே
வருகிறாய் -- நான்
நானாவது வருகிறேனே -- நிழல்
என் வழியாகத்தான்
எல்லோரும்
உலகை பார்க்கிறார்கள் ...
இருந்தும்
நான் கர்வம்
கொள்வதில்லை -- ஜன்னல்
பூவும்
அவளிடம்
கேட்கும்
ஆட்டோகிராப்
எத்தனையோ முறை
நாம்
காலடிகளால்
அளந்த இந்த பாதை
இப்போது
அளக்கிறது
எனது கண்ணீரை !
வாடா மலரான
உனக்கு
என்ன அழகினை
தந்து விட போகிறது
நீ
கூந்தல் சூடும்
வாடும் மல்லிகை !
நினைவுகளை மட்டும்
இறக்கி விட்டு போகிறது
தினம்
நீ வந்திறங்கும் பேருந்து !
சீக்கிரம்
காதலித்துவிடு ....
தாமதித்தால்
என்னை காதலிக்காத
நாட்களுக்காக
வருத்தப்படுவாய் !
நீ
எனது
முதல் அழுகையா ...
கடைசி
புன்னகையா !
காளிதாசனுக்கும்
கம்பனுக்கும்
இளங்கோவடிகளுக்கும்
கிடைக்காத
வரிகளை
வரைந்து வைத்திருக்கிறது
உனது உதடுகள் !
மணிக்கணக்கில்
காத்திருந்து
ஏழுமலையானை தரிசித்தேன்
தெய்வத்தோடு !
நம்மூர்
அரசியல்வாதிகளே பரவாயில்லை
உனது
காதல் வாக்குறுதிகளின்
நிலையை நினைக்கும்போது !
உச்சி வெயில் காட்டிலே
ஒன்னெனப்போ நெஞ்சு கூட்டிலே
கள்ளம் கபடம் இல்லாதவள்
என்று
உன்னை நினைக்க முடியவில்லை
என்னை
களவாடியவள் ஆயிற்றே !
தோட்டத்து பூக்களும்
செல்பி எடுக்க துடிக்கும்
பூ
கற்களால் கட்டப்பட்டது
என்றார்கள் ...
காதலால் கட்டப்பட்டது
என்றேன் நான் !
கவிதைக்கு
பொய் அழகுதான் ...
உன்னை
வர்ணிக்கும் வரிகள் தவிர !
அழுகை கூட
கவிதைதான் ...
பிறந்த குழந்தையின்
முதல் அழுகை !
No comments:
Post a Comment