Thursday, April 14, 2022

ஆதியும் நீயே அந்தமும் நீயே

மனக்கடலில் நீலநிலா ஒன்று நீராடும்

நீராடும் நிலா அவளிடம்  அழகாடும் 

அழகாடும் அவளை கண்டு சோலையாடும் 

சோலையாடும் பூக்களில் தேனாடும் 


தேனாடும் அவள் விழி-கள் வடிக்கும் 

கள் வடிக்கும் விழிகண்டு மனம் துடிக்கும் 

மனம் துடிக்கும் நேரத்தில் காதல் பிறக்கும் 

காதல் பிறக்கும் இதயத்தில் கவி சிறக்கும் 


கவி சிறக்கும் மொழியிலும் தயக்கங்கள்     

தயக்கங்கள் சொல்லித்தரும் மயக்கங்கள்    

மயக்கங்கள் கொண்டுவரும் நவரசங்கள்

நவரசங்கள் தாங்காது இதயங்கள்


இதயங்கள் இடம் மாறி தடுமாறும் 

தடுமாறும் கால்களும் தடம் மாறும் 

தடம் மாறும் வாலிபத்தில் முறுக்கேறும் 

முறுக்கேறும் ஆசைகள் அவளை நினைத்தே பசி ஆறும் 


பசி ஆறும் அதரங்கள் அனல் மூட்டும் 

அனல் மூட்டும்  எண்ணங்கள் ருசி கூட்டும் 

ருசி கூட்டும் நினைப்புகள் தேரோட்டும்  

தேரோட்டும் காதல்மழை சீராட்டும்


சீராட்டும் மோகங்கள் பஞ்சணை

பஞ்சணையில் என்றுமே நீ துணை  

நீ துணை இருக்க சுவர்க்கம் காணும் நெஞ்சணை 

நெஞ்சணையில் என்றும் கொள்ளாதே  வஞ்சனை 

No comments:

Post a Comment